ராசு மதுரவனின் ‘முத்துக்கு முத்தாக’, ‘கோரிப்பாளையம்’, ‘சாவி’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த பிரகாஷ் சந்திராவும், இயக்குநரும் நடிகருமான தருண் கோபியும் இணைந்து நடிக்கும் படத்திற்கு ‘மூத்தகுடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
‘சாவி’ படத்தை தயாரித்த தி ஸ்பார்க்லேண்ட் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகும் ‘மூத்தகுடி’ படம் 1970-களில் கோவில்பட்டி அருகே நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகிறது.
‘டெல்டா’, ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரவி பார்கவன் இயக்கும் இப்படத்தில் பிரகாஷ் சந்திரா மற்றும் தருண் கோபி ஹீரோக்களாக நடிக்க, ஹீரோயினாக அன்விஷா அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், ராஜ்கபூர், சிங்கம் புலி, யார் கண்ணன், சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்க, பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா இப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார்.

19870-களில் நடந்த உண்மை சம்பவம் கதைக்களம் என்பதால், கோவில்பட்டி, சாத்தூர், சங்கரன்கோவில், எட்டயபுரம், கயத்தாறு, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் 1970 மற்றும் 1980-களில் உள்ளது போன்றஇடங்களை தேர்வு செய்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.
ஹீரோவாக நடிப்பதுடன் தி ஸ்பார்க்லேண்ட் நிறுவனம் மூலம் பிரகாஷ் சந்திரா இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார். ரவிசாமி ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் முருகானந்தம் இசையமைக்கிறார். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்ய, கதை மற்றும் வசனத்தை எம்.சரக்குட்டி எழுதுகிறார். பாடல்களை நந்தலாலா எழுதுகிறார். சரவெடி சரவணன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...