’பாகுபலி’ வெற்றிக்குப் பிறகு இப்படி ஒரு படம் தமிழ் மொழியில் வெளியாகாதா? என்று ஏங்கிக்கொண்டிருந்த தமிழ் ரசிக்ரகளின் ஏக்கத்தை போக்கும் விதத்தில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தை மிக பிரம்மாண்டமான திரைப்படமாக லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பலர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக எடுக்க முயற்சித்து அதில் தோல்வியடைந்த நிலையில், இயக்குநர் மணிரத்னம் அந்த முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், அவர் இதை வெற்றிகரமாக செய்வாரா? என்ற கேள்வி பலரிடம் ஏற்பட்ட நிலையில், மற்றவர்களால் செய்ய முடியாததை செய்து முடிக்கும் மற்றும் இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் அவருடன் கைகோர்த்தவுடன் நிச்சயம் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் திரைப்படமாக உருவாகும் என்ற நம்பிக்கை பிறந்தது.
அதன்படி, பல சிக்கள்கள் வந்தாலும் அனைத்தையும் எதிர்த்து நின்று வெற்றிகரமாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தை சுபாஷ்கரன் தயாரித்து முடித்திருக்கிறார். மணிரத்னத்தின் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பதோடு, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
தமிழர்களின் பெருமையை உலகிற்கு சொல்லும் மேலும் ஒரு ஆதாரமாகவும், சோழ மன்னர்களின் ஆட்சி மற்றும் தமிழகத்தை தாண்டிய அவர்களின் வெற்றியை உலகிற்கு சொல்லும் ஒரு திரைப்படமாக உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இந்திய சினிமாவை தாண்டி உலக சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்று டீசரை பார்த்த ரசிகர்களும், பல பிரபலங்களுக்கும் பேசி வருகிறார்கள்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...