Latest News :

டிரைலர் படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது - 'பேட்டரி’ படத்தை பாராட்டிய இயக்குநர் வெற்றி மாறன்
Monday July-11 2022

மணிபாரதி இயக்கத்தில் செங்குட்டுவன், அம்மு அபிராமி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘பேட்டரி’. ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

 

இதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், வசந்தபாலன், மாரிமுத்து, பிருந்தா சாரதி, சரண், பன்னீர் செல்வம், நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், மதன் பாப், சூரி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கல் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றி மாறன் பேசுகையில், “இப்படம் ஆரம்பித்ததில் இருந்து மணிபாரதியை தெரியும். இப்படத்தை முடித்து விட்டு பார்க்க சொன்னார். அந்த நேரத்தில் பார்க்க முடியவில்லை. அவர் கேட்டபோதே இப்படத்தை பார்த்திருந்தால் அவர் கூறியதுபோல இப்படம் வெளியாவதற்கு உதவி புரிந்திருப்பேன். ஆனால், இப்போது PVR வெளியிகிறார்கள். நான் வெளியிடுவதைவிட இப்படம் இப்போது பெரிய வெளியீடாக தான் இருக்கும். அது இப்படத்திற்கு நல்லது என்று தான் நினைக்கிறேன். இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள். டிரைலரைப் பார்க்கும் போது ஈடுபாட்டுடனும், பிடிப்புடனும் இருக்கிறது. ஒரு நல்ல படத்தில் இருந்து தான் இதுபோன்ற டிரைலர் வரும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. இப்படத்தைப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன். இயக்குனர் மணிபாரதிக்கு சிறப்பான வாழ்த்துகள். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்.” என்றார்.

 

இயக்குனர் வசந்தபாலன் பேசுகையில், “தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பது தான் சினிமாவின் விதி. புட் அண்ட் டிட் வார்த்தைகள் ஓடிடி யில் டிரெண்ட் ஆகியிருக்கிறது. மீண்டும் வெற்றி பெறுவது என்பது பெரிய விஷயம். ஆனால், மணிபாரதி திரைக்கதை, வசனங்களை நண்பர்களுக்கு பகிர்ந்தளித்ததில் இருந்தே அவர் மீண்டும் வெற்றிபெறுவார் என்று தெரிகிறது. அவருக்கு தன்னைப் பற்றிய சரியான புரிதல் தான் இதற்கு காரணம். ஒரு படத்திற்கு திரைக்கதைத் தான் முக்கியம். திரைப்படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது அருமை, வேற லெவல் என்ற.. வார்தைகள் 2 கிட்ஸ்களின் தாரக மந்திரமாக உள்ளது.” என்றார்.

 

இயக்குனர் சரண் பேசுகையில், “இக்காலகட்டத்தில் திரைப்படத்தை எடுத்து வெளியாகுவது என்பது பெரிய டாஸ்க். உத்வேகத்தோடு வரும் தயாரிப்பாளர்களால் தான் தமிழ் சினிமா வாழ்ந்து கொண்டிருக்கிறது. மணிபாரதி வெயிலில் நின்றாலே போதும் சார்ஜ் ஆகிவிடுவார். ஆரம்ப காலத்தில் இருந்தே அவர் என்னுடைய நண்பர். நான் எப்பொழுது படம் இயக்கினாலும், அவரிடம் தான் கூறுவேன். நமக்குள் புகுந்து நாம் எப்படி யோசிப்போமா அதே மாதிரி யோசிப்பவர்கள் கிடைப்பது அரிது. அப்படிப்பட்டவர் தான் மணிபாரதி. எங்கள் ஜெனரேஷன்களில் வசந்த பாலன் போன்றோர்கள். அதன் பிறகு வெற்றிமாறன் வந்தார். ஆனால், 2010க்கு பிறகு அப்பாவின் பெயரை தன் பெயரின் பின்னால் சேர்த்திருக்கிறார்கள். இவர்கள் மூவரும் தான் இன்றைய தமிழ் சினிமாவை கையாளுகிறார்கள்.

 

மணிபாரதி அதை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார். இந்த படத்திற்கு ஏற்றவாறு தயாரிப்பாளரும் பட்ஜெட் ஒதுக்கியிருக்கிறார். செங்குட்டுவன் சோஷியல் மீடியாவில் டிரெண்டாக இருக்கிறார். அம்மு அபிராமி பல இடங்களில் நடிகை சரிதாவை நினைவுப் படுத்துகிறார். அவரை குட்டி சரிதா என்று கூறலாம். எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார். ஒரு படத்திலேயே பத்து படத்திற்கான வசனங்களைப் பேசி விடுவார். டப்பிங் வந்தால் அடுத்த டேக் போகாமல் பேசி விடுவார். கன்னட மொழி படமான கேஜிஎஃப் -ஐயும் வரவேற்கிறோம். விக்ரம் படத்தையும் நம்ம படம்ன்னு மார்தட்டி வரவேற்கிறோம். யார் வந்தாலும் அவர்களை ஆதரிக்கிறோம். அனைவரும் இப்படம் வெற்றி பெற  உழைத்த அனைவரையும் வாழ்த்துகிறேன். அதேபோல, குறிப்பிட்ட விழாவிற்கு தான் வெற்றிமாறன் வருவார். இந்த விழாவிற்கு அவர் வந்ததே வெற்றிதான். சித்தார்த் விபின் வித்தியாசமாக இசையமைத்திருக்கிறார்.” என்றார்.

 

இசையமைப்பாளர் சித்தார்த் விபின் பேசுகையில், “மணிபாரதி சாரும், சம்பத் சாரும், பேட்டரி படத்தைப் பற்றி கூறி, வாய்ப்புக் கொடுத்தார்கள். மணிபாரதி சாருடன் பணியாற்றும் போது மிகவும் ஆர்வமாக இருக்கும். இதயப்பூர்வமாக பணியாற்றும் அனுபவம் கிடைக்கும். அம்மு அபிராமி சிறப்பாக நடித்திருக்கிறார்.” என்றார்.

 

இயக்குநர் மோகன் ராஜா பேசுகையில், “கொரானாவிற்கு பிறகு இது தான் முதல் மேடை. 3 வருடங்களாக உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்காமல் வருத்தப்பட்டேன். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஹைதராபாத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். நடிகர் சிரஞ்சீவையை இயக்கிக் கொண்டிருக்கிறேன். அனுபவம் எப்போதும் தோல்வியடையாது. அதுபோல, இப்படக் குழுவினர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள். இயக்குனர் மணிபாரதியால் தான் வேலைக்காரன் படத்தில் சினேகா பாத்திரம் உருவாகியது. அப்படத்தில் முழுக்க முழுக்க எனக்கு உறுதுணையாக இருந்தார். இளமை புதுமையைத் தரலாம் ஆனால், அனுபவம் தான் அழுத்தத்தைத் தரும். கொரோனா இன்னும் சவாலாக போய்க் கொண்டிருக்கும் காலத்தில், அனைவரும் திரையரங்கிற்கு வந்து படத்தைப் பார்க்க வேண்டும். கூட்டமாக வந்து திரையரங்கிற்கு வந்து ஊக்கவிக்க வேண்டும். மக்கள் பல படங்களை இது நன்றாக இருக்கும் என்று கணித்துக் கொண்டு போய், அது தவறாகப் போனதும் உண்டு. அதேபோல இப்படத்தையும் திரையரங்கிற்கு வந்து பாருங்கள்.” என்றார்.

 

நடிகை அம்மு அபிராமி பேசுகையில், “அசுரன் படத்தால் தான் இப்பட வாய்ப்புக் கிடைத்தது. ஆகையால், முதலில் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி. என்னைப் பாராட்டி பேசிய அனைவருக்கும் மிக்க நன்றி. குலுமணாலியில் புடவை கட்டி நடனமாட வேண்டும் என்கிற கனவு இப்படத்தில் நனவானது. மணிபாரதி சாரிடம் அனைவரிடமும் அன்பாகவும், அனுசரித்து போக வேண்டும் என்பதையும் அவரிடம் கற்றுக் கொண்டேன். இப்படம் சொல்ல வேண்டிய கதை,” என்றார்.

 

நடிகர் சூரி பேசுகையில், “இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்த லிங்குசாமி சாருக்கு நன்றி. தான் வெற்றியடைவது மட்டுமல்லாமல் தன்னுடன் அசோசியேட்டாக இருப்பவர்களும் வெற்றியடைய வேண்டும் என்று நினைக்கும் பெரிய மனது கொண்டவர். மணிபாரதி அண்ணன் அழைக்கும்போது நான் இந்த படத்திலும் நடிக்கவில்லை, இப்படத்தைப் பற்றி எதுவும் தெரியாது. ஆகையால் என்ன பேசுவது என்று கேட்டேன். இப்படத்தின் கதையை இயக்குனர் மணிபாரதி கூறும்போது, இதுமாதிரியெல்லாம் இப்போது நடக்கிறதா? என்று கேட்டேன். ஆமாம் தம்பி என்றார். அவர் கதை கூறிய விதத்தைக் கேட்டு எனது கை மட்டும் நீளமாக இருந்திருந்தால் அங்கிருந்தே அவரை கட்டியணைத்திருப்பேன். ஒரு உயிருக்கு பிரச்சனை என்றால் கண்டிப்பாக காப்பாற்ற வேண்டும். அப்பா, அம்மா தம்பி என்று அவர்களுக்கு உயிர் போகும் அளவிற்கு பிரச்சனை என்றால் தவித்துவிடுவோம். ஒரு மனிதன் என்றைக்கு வேண்டுமானால் இறந்துவிடுவான். அந்த சூழ்நிலையில், ஒன்று கடவுளிடம் நிற்பான், இன்னொன்று மருத்துவரிடம் நிற்பான். அதுதான் உண்மை.அப்படி இருக்கும் பட்சத்தில் சில மருத்துவ கும்பல், நம்முடைய பாசத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறது. அதற்கு தீர்வு கொடுக்கும் படமாக இது இருக்கும். இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான படம்.

 

இன்று இருக்கும் காலகட்டத்தில் எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் கலாயிக்கிறார்கள். அதேபோல், முழு படத்தையும் ஈடுபாட்டோடு பார்ப்பதில்லை. பெரிய இயக்குனர்களின் படங்களை அனைவரும் சுலபமாக பார்க்கிறார்கள். ஆனால், புது நடிகர்கள், இயக்குனர்களின் படங்களைப் பார்ப்பதற்கு தயங்குகிறார்கள். ஆனால், அனைவரும் இப்படத்தை பார்க்க வேண்டும். எவ்வளவு வசனங்கள் கொடுத்தாலும் போதாது என்று கூறும் மனிதர் எம்.எஸ்.பாஸ்கர். அதேபோல், அனைவருடைய வசனங்களையும் இவரே பேசிவிடுவார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் ஸ்டூடியோவிற்கு வரும்போது கண்களில் படுவது, கைகளில் கிடைப்பது என்று எல்லாவற்றையும் எடுத்து வந்து இசையமைக்கும் வல்லமைப் படைத்தவர். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.

 

நடிகர் செங்குட்டுவன் பேசுகையில், “எந்த மேடையாக இருந்தாலும், நான் பேசும் முதல் மனிதர் என் அப்பா தான். என்னை இந்தத் துறையில் வெற்றியாளனாக உருவாக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார். கொரோனாவிற்கு பிறகு இத்தனை நாள் நாங்கள் இழுத்துப் பிடித்ததற்கு காரணம் திரையரங்கில் வெளியிட வேண்டும் என்று தான். இங்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கும் அனைத்து இயக்குனர்களுக்கும் நன்றி.” என்றார்.

 

இயக்குனர் மணிபாரதி பேசுகையில், “திரைச்சுவை என்னும்  பத்திரிகையில் சப் எடிட்டராக பணியாற்றினேன். ரஜினி முதல் அனைவரையும் பேட்டி எடுத்திருக்கிறேன். ஜெயம் ராஜாவின் ரசிகன் நான். சிரஞ்சீவியை வைத்து படம் இயக்கி வருகிறார். தெலுங்கில் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளில் இப்படமும் இருக்கிறது. இப்பசம் வெற்றியடைய வாத்துக்கள். விழாவிற்கு வந்ததற்கு நன்றி. இப்படத்தின் கதையை அம்மு அபிராமியின் அப்பாவிடம் கூறும்போது, அம்மு அபிராமி படத்தின் முழு கதையையும் கேட்டார். அம்மு அபிராமி அப்பாவிடம் நேரில் அழைத்து வாருங்கள் என்று கூறினேன். அவருடைய பாத்திரத்தைப் பற்றி 10 நிமிடங்கள் கூறினேன். அதன்பிறகு படத்தின் கதையைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட கேட்கவில்லை. அவருடைய நடிப்பை சரண் நடிகை சரிதாவுடன் ஒப்பிட்டார். நான் நடிகை ரேவதியுடன் ஒப்பிடுகிறேன். தயாரிப்பாளர் மாதையனுக்கு மிக்க நன்றி. அன்பே அன்பே படத்திற்கு நான் கேட்பதையெல்லாம் கொடுத்தார்கள். ஆனால், நான் தான் சரியாக எடுக்கவில்லை. ஆனால், மாதையன் சார் இந்த படத்திற்கு என்ன தேவையோ அதை செய்துக் கொடுத்தார். படம் முடிக்கும் வரை எந்தவிதத்தலும் தலையிடவில்லை.

 

நான் செய்த புண்ணியமோ அல்லது என் அப்பா அம்மா செய்து புண்ணியமோ தெரியவில்லை. இயக்குனர் வெற்றி மாறன், நடிகர் சூரி மற்றும்ம் பலரும் இங்கு வந்திருக்கிறார்கள். தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார். இந்த வருடத்தில் எத்தனை விருதுகள் வெல்ல போகிறார் என்று தெரியவில்லை. நடிகர் செங்குட்டுவன் முதல் படத்திலேயே கூட்டத்தை சேர்த்து விட்டார். நடிப்புடன் தயாரிப்பு பணிகளையும் பார்த்துக் கொண்டார். இப்படத்திற்காக எதை செய்யலாம் என்று யோசனை கேட்டால், எது சிறந்ததோ அதைத்தான் தேர்வு செய்வார். அதுவே எனக்கு இப்படம் சிறப்பாக இயக்குவதற்கு உறுதுணையாக இருந்தது.

 

வெற்றிமாறனின் விடுதலை வெற்றியடைய வாழ்த்துகள் சார். ஜெமினியில் பணியாற்றியதால் அன்பே அன்பே படம் கிடைத்தது. சரண் சார் இப்போது ஒரு படம் இயக்கி வருகிறார். அப்படம் நிச்சயம் வெற்றியடையும். பன்னீர் செல்வமும் ஐஸ்வர்யா முருகன் என்ற படத்தை இயக்குகி இருக்குகிறார். வாரியார் படத்திற்கு பிறகு வெளியாகும்.

 

பிருந்தா சாரதி லிங்குசாமியின் ரன் படத்தைத் தவிர அனைத்து படங்களுக்கும் அவர் தான் வசனகர்த்தா. சாகித்ய அகாடமி விருது வாங்கும் தகுதி வாய்ந்தவர். வசந்தபாலனும் ஒரே இடத்தில் தான் தங்கியிருந்தோம். என்னை விட பெரிய டைரக்டரை விழாவிற்கு கூப்பிட வேண்டியது தானே என்றார். வெயிலோ, அங்காடித் தெருவோ அவர்கள் எடுக்கவில்லையே என்றேன். உடனே வந்துவிட்டார். அநீதி என்று படம் இயக்கி வருகிறார், வாழ்த்துக்கள்.  எம்.எஸ்.பாஸ்கர் வியந்து பார்க்கக் கூடிய நடிகர் அதில் எந்த சந்தேகமுமில்லை.

 

ஒளிப்பதிவாளர், சதுரங்கவேட்டைக்குப் பிறகு 10 படங்கள் முடித்துவிட்டார். இப்படத்திற்கு பாராட்டு வந்தால், அதற்கு அவரும் முக்கிய காரணம். கலாபவன் மணியை நானும் சரண் சாரும் தான் தமிழுக்குக் கூட்டி வந்தோம். நேரமில்லை என்று கூறியவர் ஜெமினிக்குப் பிறகு தமிழில் அதிக படங்கள் நடித்து, அதிகம் சம்பாதித்தார். இப்படத்தில் அறிமுகமாகியிருக்கும் கன்னட நடிகர் ராஜ் தீபக் செட்டி  இவர் போல வருவார். சித்தார்த் விபின் சிறப்பான இசையமைத்திருக்கிறார். மதன்பாப் சார் எனக்காக ஒரு விளம்பர படம் நடித்துக் கொடுத்தார். இங்கு வந்ததற்கு நன்றி.

 

கலை இயக்குனரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். சினேகன் சாரும் மிகவும் உறுதுணையாக இருந்தார். இப்படத்திற்கு சிறுமி கதாபாத்திரத்திற்காக தேடும்போது, கைதி படத்தில் நடித்த மோனிகாவை கேட்டோம். கதை பிடித்தால் தான் நடிப்போம் என்று அவர் அம்மா கூறினார். 1 மணி நேரம் கதை கேட்ட பிறகு ஒப்புக் கொண்டார்கள். படம் பார்த்துவிட்டு 1 மணி நேரம் பேசினார். அந்தளவிற்கு அவர்களுக்கு படம் பிடித்திருந்தது. மாரிமுத்து என்னுடைய சிறந்த நண்பர்.

 

நடிகர் சூரி சாருக்கு இரவு 11 மணிக்கு பேசினேன். வளர்ந்து வரும் பெரிய நடிகர் எனக்காக இங்கு வருவதற்கு பெரிய மனசு வேண்டும். நான், எஸ்.ஜே.சூர்யா, மாரிமுத்து நாங்கள் மூவரும் ஆசை படத்தில் பணியாற்றினோம். இப்படத்திற்காக டிவிட் செய்திருக்கிறார். அதேபோல சம்பத் மிக மிக உறுதுணையாக இப்படத்திற்கு என்ன தேவையோ அதை செய்து கொடுத்தார்.

 

இந்த விழா இவ்வளவு சிறப்பாக நடப்பதற்கு உறுதுணையாக இருந்த மக்கள் தொடர்பாளர் ஜான்சன் அவர்களுக்கு நன்றி.” என்றார்.

Related News

8367

உடல் நலக்குறைவால் காலமான ரசிகர்! - வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி
Wednesday April-24 2024

நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...

அமீர் நடிப்பில் உருவாகியுள்ள ‘உயிர் தமிழுக்கு’ மே 10 ஆம் தேதி வெளியாகிறது!
Wednesday April-24 2024

யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ’ஜெய் ஹனுமான்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!
Wednesday April-24 2024

கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...