அப்பா நடிகர் கார்த்திக்கையும், மகன் கெளதம் கார்த்திக்கையும் சேர்த்து வைத்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செழியன். அதற்காக அவர்கள் இதுவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்களோ!, என்று யோசிக்க வேண்டாம்.
’சமர்’ ‘தீராத விளையாட்டு பிள்ளை’ ‘நான் சிகப்பு மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய திரு, தான் இயக்க உள்ள நான்காவது படத்தில் நவரச நாயகன் கார்த்திக்கும், அவரது மகனும் வளர்ந்து வரும் நடிகருமான கெளதம் கார்த்திக்கும் முதன் முறையாக இணைந்து நடிக்க உள்ளனர்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்டிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செழியன் தயாரிக்கிறார்.
படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ள இப்படத்தின் ஹீரோயின் மற்றும் பிற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...