அப்பா நடிகர் கார்த்திக்கையும், மகன் கெளதம் கார்த்திக்கையும் சேர்த்து வைத்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செழியன். அதற்காக அவர்கள் இதுவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்களோ!, என்று யோசிக்க வேண்டாம்.
’சமர்’ ‘தீராத விளையாட்டு பிள்ளை’ ‘நான் சிகப்பு மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய திரு, தான் இயக்க உள்ள நான்காவது படத்தில் நவரச நாயகன் கார்த்திக்கும், அவரது மகனும் வளர்ந்து வரும் நடிகருமான கெளதம் கார்த்திக்கும் முதன் முறையாக இணைந்து நடிக்க உள்ளனர்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்டிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செழியன் தயாரிக்கிறார்.
படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ள இப்படத்தின் ஹீரோயின் மற்றும் பிற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...