கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒடிடி-யில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ‘சேத்துமான்’ படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் புதிய படத்தை ‘உறியடி’ புகழ் இயக்குநரும் நடிகருமான விஜய் குமார் ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.
கிராமப்புற பின்னணியில் அரசியல், ஆக்ஷன், காதல் கலந்த முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக தொடர்ந்து 60 நாட்கள் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

விஜய் குமார் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். திலீபன், பாவல் நவகீதன், மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த வஸந்தா இசையமைக்கிறார். சி.எஸ்.பிரேம் குமார் படத்தொகுப்பு செய்ய, ஸ்டன்னர் சாம் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். ஏழுமலை கலை இயக்குநராக பணியாற்றுகிறார். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதுகிறார்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...