கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒடிடி-யில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ‘சேத்துமான்’ படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் புதிய படத்தை ‘உறியடி’ புகழ் இயக்குநரும் நடிகருமான விஜய் குமார் ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.
கிராமப்புற பின்னணியில் அரசியல், ஆக்ஷன், காதல் கலந்த முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக தொடர்ந்து 60 நாட்கள் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
விஜய் குமார் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். திலீபன், பாவல் நவகீதன், மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த வஸந்தா இசையமைக்கிறார். சி.எஸ்.பிரேம் குமார் படத்தொகுப்பு செய்ய, ஸ்டன்னர் சாம் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். ஏழுமலை கலை இயக்குநராக பணியாற்றுகிறார். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதுகிறார்.
நியூ மங்க் பிக்சரஸ் சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் என்...
தமிழ் திரைப்படத் துறையில் ஒரு மிகப்பெரிய சாதனையாக, ’டெவிலன்’ என்ற படம் உலக சாதனைப் புத்தகமான நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பெயர் பதிவு செய்துள்ளது...
ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்...