‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குநர் பா.இரஞ்சித், அடுத்ததாக விக்ரமை வைத்து படம் இயக்குகிறார். இப்படம் நடிகர் விக்ரமின் 61 வது திரைப்படமாக உருவாக உள்ளது. ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா, இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்தின் துவக்க விழா இன்று பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது.
‘கோப்ரா’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ என இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கும் விக்ரம், தற்போது இயக்குநர் பா.இரஞ்சித்துடன் கைகோர்த்திருப்பதால் இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 22 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு தற்காலிக தலைப்பாக ‘விக்ரம் 61’ என்று வைக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் துவக்க விழாவில் நடிகர்கள் சிவகுமார், ஆர்யா, தயாரிப்பாளர்கள் டி.சிவா, எஸ்.ஆர்.பிரபு, அபினேஷ் இளங்கோவன், சி.வி.குமார், இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இப்படத்தின் கதை, திரைக்கதையை தமிழ் பிரபா எழுத, ஒளிப்பதிவை கிஷோர் குமார் கவனிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு செல்வா படத்தொகுப்பு செய்ய, கபிலன், அறிவு, உமாதேவி ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். சண்டை காட்சிகளை அன்பறிவு அமைக்க, நடனங்களை சாண்டி மேற்கொள்கிறார்.
இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் படப்பிடிப்பு பற்றி விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...