ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’, ‘அண்ணாத்த’ ஆகிய படங்கள் படு தோல்வியை தழுவிய நிலையில், கமல்ஹாசனின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதோடு வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தியது. நடிகராக கமல்ஹாசனுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததோடு, தயாரிப்பாளராகவும் பல கோடி லாபத்தை கொடுத்தது. இப்படி ஒரு லாபத்தை எந்த ஒரு தயாரிப்பாளரும் பெற்றதில்லை, என்று சொல்லும் அளவுக்கு கமல்ஹாசனுக்கு கோடி கோடியாய் கொண்ட வைத்தது விக்ரம் படம்.
முன்னதாக இந்த கதை ரஜினிகாக தான் லோகேஷ் கனகராஜ் எழுதினாராம். கமல் தயாரிக்க இருந்த இந்த படத்தில் நடிப்பதில் ரஜினி சற்று தயக்கம் காட்டவே கமல்ஹாசனை வைத்தே லோகேஷ் இயக்கி விட்டார். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க ரெடியாகிவிட்டாராம். அதே சமயம், ஒரு கண்டிஷனையும் ரஜினி போட்டுள்ளாராம்.
அதாவது படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க இருந்த நிலையில், தானும் இந்த படத்தின் தயாரிப்பில் இணைவேன் என்று சொல்லிவிட்டாராம். காரணம், விக்ரம் படத்தால் கமலுக்கு கிடைத்த பெரும் லாபம் குறித்து அறிந்த ரஜினிகாந்த், தான் நடிக்கும் படத்திற்கும் அப்படி ஒரு லாபம் வரும், அதை நாம் சரிபாதியாக பெற வேண்டும், என்று நினைத்து தான் இப்படி ஒரு கண்டிஷனை போட்டாராம். இது ரஜினிகாந்துக்கு கமல்ஹாசன் மீது ஏற்பட்ட பொறாமையை வெளிப்படுத்துவதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.
ரஜினிகாந்தின் இந்த கண்டிஷனுக்குக்கு கமல்ஹாசனும் ஒகே சொல்லிவிட்டாராம். எனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பது உறுதியாகியிருப்பதோடு, அந்த படத்தை கமல் மற்றும் ரஜினி இருவரும் இணைந்து தயாரிக்க இருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...