அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் கடந்த ஞாயிறு மாலை நடந்த துப்பாக்கி சூட்டில், 50 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதே இடத்தில் தான் தமிழ்ப் படமான ‘காவியன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்றுள்ளது. இதில் ஷாம், ஹாலிவுட் நடிகர் என பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
ஸ்டிபன் க்ரைக் என்ற 64 வயது மனநலம் பாதிக்கப்பட்டவர் ஓட்டல் ஒன்றின் 34 வது மாடியில் நின்றுக்கொண்டு, அந்த கட்டடத்தின் கீழே நடந்துக் கொண்டிருந்த இசை விழாவில் கூடியிருந்த மக்களை நோக்கி இயந்திர துப்பாக்கியால் சுட்டுள்ளான். 50 பேரை பலிவாங்கிய இந்த சம்பவம் அமெரிக்கா மட்டும் இன்றி, உலக நாடுகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த கொலையாளில் நின்று சுட்ட அதே தளத்தில் தான் ‘காவியன்’ படப்பிடிப்பிற்கான கேமரா வைக்கப்பட்டிருந்ததோடு, அன்றைய தினமும் துப்பாக்கி சுடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...