’நிபுணன்’ படத்திற்கு பிறகு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம் ஒன்றில் வரலட்சுமி ஒப்பந்தமாகியுள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை, மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பிரியதர்ஷினி என்ற பெண் இயக்குநர் இயக்குகிறார்.
வரும் 15 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வரும் 5 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என்று மூன்று மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் மூன்று மொழிகளுக்கான போஸ்டர்களை, சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான் மற்றும் ராணா ஆகியோர் வெளியிட உள்ளார்கள்.
இதற்காக, இந்த மூன்று ஹீரோக்களுக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள நடிகை வரலட்சுமி, அவர்களை தனது டார்லிங் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Thankkkk u so much to my darling friends for launching the first look.. love u guys @Siva_Kartikeyan @dulQuer @RanaDaggubati @VigneshShivN pic.twitter.com/qv14nJwAui
— varu sarathkumar (@varusarath) October 2, 2017
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...