Latest News :

பாவனா கடத்தல் வழக்கு - நடிகர் திலீப்புக்கு ஜாமீன் கிடைத்தது
Tuesday October-03 2017

கடந்த பிப்ரவரி மாதம் பிரபல நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்திற்கு பின்னணியில் பிரபல மலையாள நடிகர் திலீப் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதையடுத்து அவரை கேரள போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனார். பிறகு ஜாமீன் கேட்டு திலீப் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதுபோல் தொடர்ந்து நான்கு முறை நடிகர் திலீபின் ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டது.

 

இதற்கிடையே, திலீப் ஐந்தாவது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, பாவனாவை கடத்தி கற்பழித்த சம்பவத்தால் திலீப்புக்கு ரூ.63 கோடி லாபம் கிடைக்கும் என்று இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், சிறையில் சக கைதிகளிடம் கூறியதாக, கூறிய பாவனா வழக்கறிஞர், திலீபுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று வாதாடினார்.

 

இந்த நிலையில், திலீப் கைதாகி 85 நாட்கள் ஆகியும் போலீசார் அவர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததையடுத்து, அவரை ஜாமீனில் விடுவிப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்து அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

Related News

842

மக்கள் என் கருத்துகளை ஏற்றுக்கொண்டனர் - இயக்குநர் பா.இரஞ்சித் பெருமிதம்
Sunday September-14 2025

லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...

கதை தேர்வு மூலம் வியக்க வைக்கும் அர்ஜூன் தாஸ்!
Saturday September-13 2025

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

Recent Gallery