கடந்த பிப்ரவரி மாதம் பிரபல நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்திற்கு பின்னணியில் பிரபல மலையாள நடிகர் திலீப் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை கேரள போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனார். பிறகு ஜாமீன் கேட்டு திலீப் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதுபோல் தொடர்ந்து நான்கு முறை நடிகர் திலீபின் ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே, திலீப் ஐந்தாவது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, பாவனாவை கடத்தி கற்பழித்த சம்பவத்தால் திலீப்புக்கு ரூ.63 கோடி லாபம் கிடைக்கும் என்று இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், சிறையில் சக கைதிகளிடம் கூறியதாக, கூறிய பாவனா வழக்கறிஞர், திலீபுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று வாதாடினார்.
இந்த நிலையில், திலீப் கைதாகி 85 நாட்கள் ஆகியும் போலீசார் அவர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததையடுத்து, அவரை ஜாமீனில் விடுவிப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்து அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...