இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில், கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து பா.இரஞ்சித் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் படம் தயாரிக்கிறார். லெமன் லீல் கிரியேஷன்ஸ் சார்பில் கணேசமூர்த்தி இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜெய்குமார் இயக்குகிறார்.
’O2’, ‘தம்மம்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த தமிழழகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். தமிழ்பிரபா மற்றும் ஜெய்குமார் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதுகின்றனர்.
தமிழகத்தின் நகரங்கள் , ஊர்களின் கிரிக்கெட் விளையாட்டின் உணர்வுப்பூர்வமான ஒரு வாழ்வியலையும் , நட்பு , கொண்டாட்டங்களையும் ஜனரஞ்சகமாக அனைவரும் ரசிக்கும் படியான கதையமைப்பில் சொல்ல வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...