இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில், கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து பா.இரஞ்சித் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் படம் தயாரிக்கிறார். லெமன் லீல் கிரியேஷன்ஸ் சார்பில் கணேசமூர்த்தி இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜெய்குமார் இயக்குகிறார்.
’O2’, ‘தம்மம்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த தமிழழகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். தமிழ்பிரபா மற்றும் ஜெய்குமார் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதுகின்றனர்.
தமிழகத்தின் நகரங்கள் , ஊர்களின் கிரிக்கெட் விளையாட்டின் உணர்வுப்பூர்வமான ஒரு வாழ்வியலையும் , நட்பு , கொண்டாட்டங்களையும் ஜனரஞ்சகமாக அனைவரும் ரசிக்கும் படியான கதையமைப்பில் சொல்ல வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’-வில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்...
நியூ மங்க் பிக்சரஸ் சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் என்...
தமிழ் திரைப்படத் துறையில் ஒரு மிகப்பெரிய சாதனையாக, ’டெவிலன்’ என்ற படம் உலக சாதனைப் புத்தகமான நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பெயர் பதிவு செய்துள்ளது...