தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன், ’புஷ்பா’ படத்திற்குப் பிறகு தென்னிந்திய சினிமாவையும் தாண்டி பாலிவுட்டிலும் பிரபலமடைந்துள்ளார். மேலும், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் மீது இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெற்ற இந்திய சுதந்திரன தின விழா கொண்டாட்ட பேரணியில், இந்திய தேசியக் கொடியை நடிகர் அல்லு அர்ஜுன் ஏந்தி சென்றுள்ளார். வெளிநாடுகளில் நடைபெறும் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தின் மிகப்பெரிய பேரணியாக கருதப்படும் இந்த விழாவில் அல்லு அர்ஜுன் பங்கேற்பதை பார்ப்பதற்காக சுமார் 5 லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் கூடினார்கள்.
கிராண்ட் மார்ஷல் என்ற பட்டத்துடன் அல்லு அர்ஜுன் தேசிய கொடியை ஏந்தி பேரணியில் செல்ல, அவருடன் பல லட்சம் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் பேரணியில் பயணிக்க, அமெரிக்காவின் நியூயார்க் நகரமே ஸ்தம்பித்து போனது.

அல்லு அர்ஜுனுக்காக இத்தனை லட்சம் ரசிகரகள் கூடியதால், இந்திய நட்சத்திரமாக இருந்தவர் தற்போது உலக நட்சத்திரமாக மாறியிருக்கிறார் என்பது நிரூபனமாகியுள்ளது.
சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...