சினிமாவில் கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகர், நடிகைகள் பல தொழில்களில் சத்தமில்லாமல் முதலீடு செய்வது ஒரு பக்கம் இருக்க, விலையுர்ந்த வீடுகள் வாங்குவதும் அதிகரித்துள்ளது. அந்த வகையில், திரையுலக வியக்கும் அளவுக்கு நடிகர் விஜய் ஒரு வீடு வாங்கியிருக்கிறாராம்.
தற்போது நீலாங்கரையில் பங்களா வீட்டில் குடும்பத்துடன் வசிக்கும் விஜய், அட்டையாறில் அலுவலகம் வைத்திருக்கிறார். இந்த நிலையில், புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு ஒன்றை விஜய் வாங்கியிருக்கிறார். அந்த ஒரு வீட்டின் விலை மட்டுமே ரூ.34 கோடியாம். அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட அந்த ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு பிளாட்டை அலுவலகமாக விஜய் பயன்படுத்தி வருகிறாராம்.
அந்த அலுவலகத்திற்கு சென்று வந்தவர்கள், அதன் பிரம்மாண்டத்தில் உரைந்து விடுகிறார்களாம். அந்த அளவுக்கு ஆடம்பரமாக இருக்கும் அந்த பிளாட் குறித்து ஒட்டு மொத்த கோலிவுட்டே பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க, இந்த தகவல் நடிகை நயன்தாரா காதுக்கு போக, அவரும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு வாங்க முடிவு செய்துவிட்டாராம்.
தற்போது அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நயன்தாரா, விஜய் வாங்கியது போல் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பிளாட்டை விரைவில் வாங்க இருப்பதாகவும், தற்போது அதற்கான முயற்சியில் அவர் இறங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...