விஜய் ரசிகர்கள் மட்டும் இன்றி உலக தமிழர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் விஜயின் ‘மெர்சல்’ பல பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில், தற்போது படமே ரிலிஸாகுமா? என்ற கேள்வியை எழுப்பும் அளவுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
‘மெர்சல்’ என்ற தலைப்பு பிரச்சினை முடிந்த நிலையில், தீபாவளிக்கு ‘மெர்சல்’ ரிலிஸ் உறுதி என்று தயாரிப்பு தரப்பு அறிவித்ததால், விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்த நிலையில், தீபாவளி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்கங்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதால், அன்றைய தினம் ‘மெர்சல்’ ரிலிஸாகது என்று கூறப்படுகிறது.
தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐநாக்ஸ் மற்றும் பி.வி.ஆர் போன்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் இன்று முதல் மூடப்பட்ட நிலையில், பிற திரையரங்கங்களின் உரிமையாளர்கள் தீபாவளி முதல் திரையரங்கங்களை மூடி தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, விஜயின் ‘மெர்சல்’ படம் ரிலிஸாவதில் மிக்கப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...