விஜய் ரசிகர்கள் மட்டும் இன்றி உலக தமிழர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் விஜயின் ‘மெர்சல்’ பல பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில், தற்போது படமே ரிலிஸாகுமா? என்ற கேள்வியை எழுப்பும் அளவுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
‘மெர்சல்’ என்ற தலைப்பு பிரச்சினை முடிந்த நிலையில், தீபாவளிக்கு ‘மெர்சல்’ ரிலிஸ் உறுதி என்று தயாரிப்பு தரப்பு அறிவித்ததால், விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்த நிலையில், தீபாவளி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்கங்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதால், அன்றைய தினம் ‘மெர்சல்’ ரிலிஸாகது என்று கூறப்படுகிறது.
தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐநாக்ஸ் மற்றும் பி.வி.ஆர் போன்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் இன்று முதல் மூடப்பட்ட நிலையில், பிற திரையரங்கங்களின் உரிமையாளர்கள் தீபாவளி முதல் திரையரங்கங்களை மூடி தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, விஜயின் ‘மெர்சல்’ படம் ரிலிஸாவதில் மிக்கப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...