Latest News :

கோடம்பாக்கத்தில் நுழைந்திருக்கும் இளம் இசையமைப்பாளர் ஜுட் லினிகர்
Tuesday October-03 2017

பெயரை படித்ததும் ஏதோ ஹாலிவுட் இசையமைப்பாளராக இருப்பாரோ என்று நினைக்க வேண்டாம், தமிழகத்தை சேர்ந்தவர் தான் இந்த ஜுட் லினிகர். விரைவில் வெளியாக உள்ள ‘உறுதிகொள்’ திரைப்படத்தின் மூலம் கோடம்பாக்கத்தில் இசையமைப்பாளராக அறிமுகாகியுள்ள ஜுட் லினிகர், குழந்தையில் இருந்தே இசை...இசை...என்று வளர்ந்ததால், இந்த இளம் வயதில் இசையமைப்பாளர் மற்றும் பாடகரானதில் ஆச்சரியமில்லை.

 

ஜுடின் தந்தையும் ஒரு இசைக் கலைஞர் என்பதால், ஜுடின் கருவில் இருந்தே இசையாலே வளர்ந்திருப்பார். அப்படி இசையால் வளர்ந்தவர், எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் படித்த போதும், பள்ளி நிகழ்ச்சிகளில் தனது இசையால் அனைவரையும் கவர்ந்தவர், ஆரம்பத்தில் பியானோ கலைஞராகவும் பிறகு கீபோர்ட் (keyboard) கலைஞராகவும் பாடகராகவும் உருவெடுத்து பள்ளி பாடல் குழுவில் இடம்பெற்று பல நிகழ்ச்சிகளில் தனது திறமையை நிரூபித்தவர், பல பரிசிகளையும் பாராட்டுக்களையும் பெற்றதோடு, அப்போதே இசை குறித்த ஆய்விலும் ஈடுபட்டுள்ளார்.

 

தனது ஆய்வின் மூலம், கணினிகளை கொண்டு தான் இசையமைத்த இசை கோர்வைகளை தனது இணையதளமான Reverbnation.com-ல் பதிவேற்றம் செய்த ஜுட் லினிகர், 11 ம் வகுப்பு படிக்கும் போதே விளம்பரப் படம் ஒன்றுக்கு இசயமைத்தார்.

 

The G7 Conglomerate என்ற விளம்பர நிறுவனம் ஜுட் லினிகரின் திறமையைப் பார்த்து, அவர் 11-ம் வகுப்பு படிக்கும் போதே, அவருக்கு இசையமைக்கும் முதல் வாய்ப்பை கொடுத்தது. பிறகு பள்ளி பொது தேர்வு நெருங்கியதால் ஒரு வருடம் இசைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தியவர், சென்னை லயோலா கல்லூரில் தனது இளங்கலை பட்டப் படிப்பை முடித்தார்.

 

கல்லூரியிலும் இசைக் குழுவில் ஈடுபட்டு தனது திறமையால் அசத்தியவர், புரோகிராமர் மற்றும் ஆடியோ செயலாக்க தொழில்நுட்ப வல்லுநராக பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார். பிறது தனது அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிக்க தொடங்கியவர், பல போராட்டங்களுக்கு பிறகு, 3 ஆண்டுகள் கழித்து தனது முதல் திரைப்படத்தின் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

 

‘உறுதிகொள்’ என்ற படத்திற்கு இசையமைத்திருக்கும் ஜுட் லினிகர், தனது பாடல்கள் மூலம் அனைவரிடமும் பாராட்டை பெற்றவர், படம் ரிலிஸுக்கு பிறகு பின்னணி இசை குறித்தும் பாராட்டுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related News

849

மக்கள் என் கருத்துகளை ஏற்றுக்கொண்டனர் - இயக்குநர் பா.இரஞ்சித் பெருமிதம்
Sunday September-14 2025

லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...

கதை தேர்வு மூலம் வியக்க வைக்கும் அர்ஜூன் தாஸ்!
Saturday September-13 2025

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

Recent Gallery