Latest News :

நான் தனி ஆள் இல்லை - தன்ஷிகா ரிட்டர்ன்!
Tuesday October-03 2017

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ‘விழித்திரு’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற டி.ராஜேந்தர், அதே மேடையில் பேசிய தன்ஷிகா தனது பெயரை குறிப்பிடவில்லை என்பதற்காக, அவருக்கு நாகரீகம் தெரியவில்லை என்று கூறியதோடு, மேடையில் அவரை அவமானப்படுத்தும் வகையில் சில நிமிடங்கள் பேசினார்.

 

தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும் அதை ஏற்காத டி.ஆர்-வாய்க்கு வந்ததை எல்லாம் பேசியதால், ஒரு கட்டத்தில் தன்ஷிகா மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.

 

இந்த சம்பவம் குறித்து முதலில் நம் இணையதளம் செய்தி வெளியிட்டது. இதன் பிறகு மற்ற இணையதளங்களிலும் இந்த செய்தி வெளியாக, சமூக வலைதளங்கள் முழுவதிலும், இந்த விவகாரம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

 

இதையடுத்து நடிகர் சங்க செயலாளர் விஷால், தன்ஷிகாவுக்கு ஆதாரவாக டி.ஆர்-க்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் அன்றைய நிகழ்வில் இருந்த வெங்கட் பிரபு, விதார்த், கிருஷ்ணா ஆகியோரும் தங்களது விளக்கத்தை அளித்து, டி.ஆர் மீது தான் தவறு என்று கூறியிருந்தார்கள்.

 

இந்த சம்பவத்திற்கு பிறகு எந்த நிகழ்விலும் கலந்துக்கொள்ளாமல், மவுனம் காத்து வந்த தன்ஷிகா, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இனிமேல் நான் தனி ஆள் கிடையாது. எனக்கு எல்லோரும் உள்ளார்கள். எல்லோருடைய கருத்துகளையும் வாசிப்பதனால் நான் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளேன், என்று தெரிவித்துள்ளார்.

Related News

850

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery