தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
6 ஆம் தேதி கோவாவில் கிறிஸ்தவ முறைப்படி முதலில் திருமணம் நடக்க, அடுத்த நாளே இந்து முறைப்படியும் திருமணம் நடைபெறுகிறது. அதன் பிறகு ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்வு நடக்க உள்ளது. இதில் சினிமா பிரபலங்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிறகு சில நாட்கள் அமெரிக்காவில் தங்க திட்டமிட்டுள்ள திருமண ஜோடி பிறகு இந்தியா திரும்பி, தாங்கள் நடித்துக் கொண்டிருக்கும் படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு, பிறகு தங்களது ஹனிமூனுக்கு செல்ல இருக்கிறார்கள்.
இதற்கிடையே, சமந்தாவின் திருமணத்திற்காக தனி விமானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் தான் நாகர்ஜூனா குடும்பமும் மற்றும் சமந்தா குடும்பமும் கோவா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் உடை, இதுவரை எந்த திருமணத்திலும் மணமக்கள் உடுத்தாத அளவுக்கு ரொம்ப பிரேத்யமாக வடிவமைக்கப்பட்டு வருகிறதாம்.
இப்படி அனைத்திருலும் பிரம்மாண்டத்தை கடைபிடிக்கும் சமந்தா - நாக சைதன்யா திருமண செலவு ரூ.10 கோடியை தாண்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...