நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதில் மூத்த நடிகைகள் மட்டும் இன்றி இளம் நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய திரைப்படங்களில் இளம் நாயகியாக கலக்கி வரும் கல்யாணி பிரியதர்ஷினி, கதையின் நாயகியாக மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
’சேஷம் மைக்-இல் ஃபாத்திமா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை தி ரூட் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் சுதன் சுந்தரம் இணைந்து தயாரிக்கின்றன. மனு சி.குமார் இயக்கும் இப்படத்திற்கு ஹேஷாம் வஹாப் இசையமைக்கிறார். சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, கிரண் தாஸ் படத்தொகுப்பு செய்கிறார். நிமேஷ் தானுர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தின் பிற நடிகர், நடிகைகள் உள்ளிட்ட மற்ற தகவல்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நாடகமான ‘சாருகேசி’ இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது...
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’-வில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்...
நியூ மங்க் பிக்சரஸ் சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் என்...