நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதில் மூத்த நடிகைகள் மட்டும் இன்றி இளம் நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய திரைப்படங்களில் இளம் நாயகியாக கலக்கி வரும் கல்யாணி பிரியதர்ஷினி, கதையின் நாயகியாக மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
’சேஷம் மைக்-இல் ஃபாத்திமா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை தி ரூட் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் சுதன் சுந்தரம் இணைந்து தயாரிக்கின்றன. மனு சி.குமார் இயக்கும் இப்படத்திற்கு ஹேஷாம் வஹாப் இசையமைக்கிறார். சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, கிரண் தாஸ் படத்தொகுப்பு செய்கிறார். நிமேஷ் தானுர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தின் பிற நடிகர், நடிகைகள் உள்ளிட்ட மற்ற தகவல்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...