நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதில் மூத்த நடிகைகள் மட்டும் இன்றி இளம் நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய திரைப்படங்களில் இளம் நாயகியாக கலக்கி வரும் கல்யாணி பிரியதர்ஷினி, கதையின் நாயகியாக மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
’சேஷம் மைக்-இல் ஃபாத்திமா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை தி ரூட் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் சுதன் சுந்தரம் இணைந்து தயாரிக்கின்றன. மனு சி.குமார் இயக்கும் இப்படத்திற்கு ஹேஷாம் வஹாப் இசையமைக்கிறார். சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, கிரண் தாஸ் படத்தொகுப்பு செய்கிறார். நிமேஷ் தானுர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தின் பிற நடிகர், நடிகைகள் உள்ளிட்ட மற்ற தகவல்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...