விஜய் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பகுதி முடிந்துள்ள நிலையில், அந்த டிவி சேனல் தனக்கு செய்த துரோகம் குறித்து நடிகை சுஜா வாருணி, மக்களிடம் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியின் நூறாவது நாளான கடைசி நாளில், கமல் அனைத்து பிக் பாஸ் உறுப்பினர்களையும் கடைசி நாள் மேடையில் அழைத்து வரவேற்பு செய்து வைக்கும் பொழுது சுஜா அவர்களால் ஒழுங்காக நடக்க முடியவில்லை. காரணம் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கால் அவரது காலில் ஏற்பட்ட காயத்தின் வலி குறையாமல் இருந்தது.
அதே சமயம், மேடையில் நடனம் ஆடும் பொழுதும் சுஜா வாருணி, அரங்கமே அதிரும்படி ஆடி அசத்தினார். இதை நோட் செய்த ரசிகர்கள், சமூக வலைதளத்தில் சுஜாவை வருத்தெடுத்துவிட்டனர்.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து ரசிகர்களுக்கு விளக்கம் அளித்துள்ள சுஜா, இரண்டும் வெவ்வேறு நாட்களில் படமாக்கப்பட்டது. ஆனால் விஜய் டிவி-யின் எடிட்டிங் திறமையால அதை மாற்றி, எனக்கு ரசிகர்களிடம் கெட்ட பெயர் வாங்கி கொடுத்துவிட்டார்கள், என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஜெ.பி பிலிம்ஸ் சார்பில் பி.ரகு தயாரிப்பில், ஆர்...
குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் மாற்றும் முயற்சியாக இந்தியாவில் முதன் முறையாக ’கலர் பென்சில்’- கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங் ஸ்டோர் சென்னை, கிளாம்பாக்கத்தில் தொடங்கப்பட்டது...
மோனிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி...