Latest News :

தொடங்கியது ’வெந்து தணிந்தது காடு’ முன்பதிவு! - வியக்க வைக்கும் சிலம்பரசனின் மாஸ்
Tuesday September-13 2022

சிலம்பரசன், கெளதம் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரது வெற்றி கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதோடு, படம் மிகப்பெரிய வசூல் சாதனை புரியும் என்று திரையுலகினர் கணித்துள்ளனர். 

 

இந்த நிலையில், ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே பல திரையரங்குகளில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகி விட்டது. குறிப்பாக அதிகாலை 5 மணி காட்சிக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்பனையாகியிருப்பது கோலிவுட்டையே வியக்க வைத்திருக்கிறது.

 

‘மாநாடு’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் மிகப்பெரிய வெற்றியை சிலம்பரசன் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மூலம் கொடுப்பார், என்ற நம்பிக்கையில் கோலிவுட் இருக்கிறது. இதற்காகவே இப்படத்தை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் போட்டிபோட்டுக் கொண்டிருக்க, டிக்கெட் முன்பதிவு தற்போது அதை நிரூபித்துள்ளது.

 

படம் வெளியாவதற்கு முன்பாகவே படம் மிகப்பெரிய வசூலை ஈட்டும் என்று எதிர்ப்பார்க்கப்படும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இத்தகைய வரவேற்பையும், சிலம்பரசனின் மாஸையும் பார்த்து ஒட்டுமொத்த கோலிவுட்டே வியப்பில் ஆழ்ந்திருக்கிறது.

 

வேல்ஸ் இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கே.கணேஷ், பிரம்மாண்டமான முறையில் தயாரித்திருக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி உலகம் முழுவடும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related News

8522

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியானது!
Tuesday March-17 2026

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

Recent Gallery