கிரினேடிவ் குழுமத்தை சேர்ந்த கிரினேட்டிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கு முதல் திரைப்படத்தில் விதார்த் நாயகனாக நடிக்கிறார். இவருடன் இணைந்து நடிகை ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார்.
புலனாய்வு விசாரணை பாணியிலான கிரைம் திரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஸ்ரீனிவாச சுந்தர் எழுதியுள்ளார். அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராஜன் இயக்கும் இப்படத்திற்கு எஸ்.ஆர்.சதீஷ் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு செய்கிறார். தினேஷ் சுப்புராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
மூன்று கட்டங்களாக இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, முதல் கட்டப்படப்பிடிப்பை இன்று சென்னையில் தொடங்கியது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...