Latest News :

அனத்து தரப்பு ரசிகர்களின் வாழ்க்கையோடு இந்த கதை சம்மந்தப்பட்டிருக்கும் - ‘சினம்’ பற்றி இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன்
Wednesday September-14 2022

‘யானை’ வெற்றியை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘சினம்’. அருண் விஜய் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்த படம் என்றாலே வெற்றி பெறும் என்பதால் இந்த படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற ‘ஹரிதாஸ்’ பட இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியிருப்பதாலும் இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிடேட் சார்பில் ஆர்.விஜயகுமார் தயாரித்திருக்கும் ‘சினம்’ படத்தின் பாடல்கள், டீசர் மற்றும் புரோமோக்கள் ஆகியவை மூலம் மக்களிடம் மிகப்பெரிய அளவில் சென்றடைந்திருப்பதோடு, எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள ‘சினம்’ வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், படம் குறித்து இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன் கூறுகையில், “’சினம்’ படம் உருவாக்கம் மற்றும் கதையில் நிறைய எமோஷன்கள் இருக்கும். இது கதைக்கும் மிக சரியாக பொருந்தி போகும். ‘ஹரிதாஸ்’ படத்திற்கு பிறகு அருண் விஜய் என்னுடைய வேலையை பாராட்டி, அடுத்து என்னுடன் பணிபுரிய விருப்பம் தெரிவித்தார். ஆனால், அதற்குள் அவர் மற்ற படங்களின் வேலைகளில் பிஸியாகி விட்டார். நானும் ‘வாகா’ படத்திற்குள் போய் விட்டேன். இதெல்லாம் முடித்து விட்டு அடுத்து இருவரும் ‘சினம்’ படத்திற்காக ஒன்றிணைந்தோம். இந்த படம் எங்கள் குழுவில் எல்லாருக்கும் திருப்தி அளிக்கும்படி நன்றாக வந்திருக்கிறது.

 

Sinam

 

’வாகா’ படத்திற்கு பிறகு என்னுடைய பலம் என்ன என்பது தெரியாமல், ஒரு தெளிவற்ற நிலையிலேயே இருந்தேன். அந்த சமயத்தில் தான் என் தந்தை, என் முந்தைய படமான ‘ஹரிதாஸ்’ஸை குறிப்பிட்டு, அதில் இருக்கும் ‘எமோஷன்ஸ்’ தான் என்னுடைய ப்ளஸ் என்றார். அதில் இருந்து தான் ‘சினம்’ படத்தின் பயணம் ஆரம்பித்தது. த்ரில்லர் மற்றும் எமோஷன்ஸ் என அனைத்தும் கலந்து மக்களுக்கு பிடித்த வகையிலான எண்டர்டெயினர் படமாக நிச்சயம் ‘சினம்’ இருக்கும்.  அனைத்து தரப்பு ரசிகர்களும் எதாவது ஒரு வகையில் இந்த படத்தை தங்களது வாழ்க்கையோடு தொடர்பு படுத்திக்கொள்வார்கள்.” என்று மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்.

Related News

8528

’சாருகேசி’ படம் வாழ்க்கையைப் பற்றி யோசிக்க வைத்தது - நடிகை சுஹாசினி நெகிழ்ச்சி
Tuesday June-24 2025

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நாடகமான ‘சாருகேசி’ இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது...

திரைப்படங்கள் மூலம் மக்களிடம் பக்தியை வளர்க்க வேண்டும் - ‘கண்ணப்பா’ பட நிகழ்வில் சரத்குமார் பேச்சு
Monday June-23 2025

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’-வில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்...

பார்வையாளர்களின் இதயத்தை மாற்றக்கூடிய படமாக ‘குட் டே’ இருக்கும் - இயக்குநர் ராஜு முருகன்
Sunday June-22 2025

நியூ மங்க் பிக்சரஸ் சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க,  அறிமுக இயக்குநர் என்...

Recent Gallery