இந்திய திரையுலமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பிரமாண்ட திரைப்படமான ‘பொன்னியின் செல்வன் - பாகம் 1’ வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் மிகப்பெரிய பொருட்ச் செலவில் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் சரத்குமார், பிரபு, பார்த்திபன், ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பு பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள படக்குழுவினர் சென்னை மட்டும் இன்றி பெங்களூர், மும்பை, ஐதராபாத், டெல்லி என இந்தியா முழுவதும் சுற்று ரசிகர்களை சந்தித்து வருவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, படம் பற்றிய புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டிங்கிள் உள்ளது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கிய ‘பொன்னியின் செல்வன்’ டிக்கெட் முன்பதிவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக சென்னையில் அதிகாலை 4.30 மணி சிறப்பு காட்சிகள் அனைத்தும் ஹவுஸ்புல்லாகியுள்ளது.
மேலும், காலை 8 மணி காட்சிகளும் ஹவுஸ்புல்லாகி வருவதால், செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் முன்பதிவில் மிகப்பெரிய சாதனையை ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கே ஜே பி டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் கே...
தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மற்றும் சாகச காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை அரிதாக இருக்கும் நிலையில், இரண்டு அம்சங்களும் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய படமாக உருவாகியுள்ளது ‘மரகதமலை’...
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் - தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் பணிகள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னையில் பத்திரிக்கையாளர் - ஊடகவியலாளர்களை சந்தித்தார்...