சீரியல் நடிகை ஜெயலட்சுமி தனது அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி பலரிடம் பணம் வசூலிப்பதாக, பாடலாசிரியர், நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளருமான சினேகன் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
சினேகனின் புகாருக்கு விளக்கம் அளித்த நடிகை ஜெயலட்சுமி, தன் மீது தவறான புகார் அளித்து தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய சினேகன் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் போலீஷ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
ஆனால், அவரது புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்த நடிகை ஜெயலட்சுமி, எழும்பூர் 13 வது நடுவர் நீதிமன்றத்தில் சினேகன் மீது வழக்கு பதிவு செய்ய மனு தாக்கல் செய்தார்.
மனுவை ஏற்ற நீதிபதி சினேகன் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, சிநேகன் மீது பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளருமான சினேகன் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...