சீரியல் நடிகை ஜெயலட்சுமி தனது அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி பலரிடம் பணம் வசூலிப்பதாக, பாடலாசிரியர், நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளருமான சினேகன் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
சினேகனின் புகாருக்கு விளக்கம் அளித்த நடிகை ஜெயலட்சுமி, தன் மீது தவறான புகார் அளித்து தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய சினேகன் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் போலீஷ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
ஆனால், அவரது புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்த நடிகை ஜெயலட்சுமி, எழும்பூர் 13 வது நடுவர் நீதிமன்றத்தில் சினேகன் மீது வழக்கு பதிவு செய்ய மனு தாக்கல் செய்தார்.
மனுவை ஏற்ற நீதிபதி சினேகன் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, சிநேகன் மீது பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளருமான சினேகன் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள ‘லிக்’ (Lik - Love Insurance Kombany) திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், நேற்று மாலை படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை, ஆவடியில் உள்ள வேல்டெக் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட் ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில், விஜய் சேதுபதி நடிப்பில், பி...
பிரபல தொழிலதிபர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், முன்னாள் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளராக இருந்தவருமான ஜாபர் சாதிக்கின், சென்னை வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் ஏப்ரல் 6 ஆம் தேதி, வருமான வரித்துறை (IT), என் சி பி மற்றும் தேர்தல் பறக்கும் படையினரால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது...