பாடலாசிரியர் சினேகன் மீது வழக்கு பதிவு! - நீதிமன்றம் அதிரடி
Wednesday September-28 2022

சீரியல் நடிகை ஜெயலட்சுமி தனது அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி பலரிடம் பணம் வசூலிப்பதாக, பாடலாசிரியர், நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளருமான சினேகன் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். 

 

சினேகனின் புகாருக்கு விளக்கம் அளித்த நடிகை ஜெயலட்சுமி, தன் மீது தவறான புகார் அளித்து தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய சினேகன் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் போலீஷ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

 

ஆனால், அவரது புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்த நடிகை ஜெயலட்சுமி, எழும்பூர் 13 வது நடுவர் நீதிமன்றத்தில் சினேகன் மீது வழக்கு பதிவு செய்ய மனு தாக்கல் செய்தார்.

 

மனுவை ஏற்ற நீதிபதி சினேகன் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

 

இதையடுத்து, சிநேகன் மீது பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளருமான சினேகன் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related News

8553

நான் ஆசைப்பட்ட திரைப்படம் ‘நீளிரா’! - கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சி
Saturday March-21 2026

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நீளிரா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

‘காளிதாஸ் 2’ ஒரு சாதாரண க்ரைம் த்ரில்லர் அல்ல! - பரத் உறுதி
Saturday March-21 2026

ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  டாக்டர் என்...

பாரம்பரியமான ஆடைகள் தான் பிடிக்கும் - நடிகை காயடு லோஹர்
Saturday March-21 2026

மேக்ஸ் ஃபேஷன் நிறுவனம், சென்னை வளசரவாக்கத்தில் தனது புதிய கிளையைத் தொடங்கியதன் மூலம் ஃபேஷன் மற்றும் திரைப்பட கலாச்சாரத்தை ஒன்றிணைத்தது...

Recent Gallery