தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் மற்றும் இன்னோவேடிவ் பிலிம் இண்டர்நேஷ்னல் இணைந்து சமீபத்தில் நடத்திய குறும்பட போட்டியில் 500-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் போட்டியிட்டன. இதில் சிறந்த 25 குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதில் ஒன்று தான் ’ஒருநாள்’ என்ற குறும்ப்டம்.
அருண் எழுதி இயக்கிய ‘ஒருநாள்’ குறும்படத்தில் லயோலா கல்லூரி மாணவர் யஷ்வந்த் மற்றும் நடனக் கலைஞர் தீபிகா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெருமாள் மற்றும் அம்மு முத்து ஒளிப்பதிவு செய்துள்ள இக்குறும்படத்திற்கு அர்ஜுன் இசையமைத்துள்ளார். சிவா படத்தொகுப்பு செய்ய, செந்தில் ஒலிக்கலவை செய்துள்ளார்.
இந்த குறும்படத்தை பார்த்த கலைஞர்களும், சிறப்பு விருந்தினர்களும் தங்களது கைத்தட்டல்கள் மூலம் இந்த படத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்ததோடு, நடிகர்களின் நடிப்பையும் வெகுவாக பாராட்டினார்கள்.

இந்த நிலையில், இந்த குறும்படத்தை பார்த்த இயக்குநர் மற்றும் எடிட்டர் பி.லெனின், சிலாகித்து பாராட்டியதுடன் தயாரிப்பாளர் தனஞ்செயன் நடத்திவரும் BOFTA அகாடமியில் இந்த குறும்படத்தை திரையிட்டு மாணவர்களைப் பார்க்க வழிவகை செய்தார்.
மேலும், இயக்குநர் அருண் வெள்ளித்திரையில் படம் இயக்குவதற்காக அவருக்கு சில தயாரிப்பாளர்களையும் இயக்குநர் லெனின் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்.
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...
ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...