நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில், அவரது அண்ணன் மகளும், பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் மனைவியும், தேசிய விருது பெற்ற நடிகையுமான சுஹாசினி அரசியலுக்கு வரப்போகிறார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட நடிகை சுஹாசினியிடம், திரைத்துறையில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வர ஆர்வம் காட்டுவதில்லையே ஏன்? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த சுஹாசினி, ”ஜெயலலிதா ஆட்சிக்கு கீழ் குடிமக்களாய் இவ்வளவு நாள் இருந்துவிட்டு திரைப்படத் துறையில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வருவதில்லையா? என கேட்பது மோசமான கேள்வி.
கம்ஹாசனும், ரஜினிகாந்தும் மட்டும் தான் அரசியலுக்கு வர வேண்டுமா? ஏன் ராதிகாவும், ரேவதியும், பூர்ணிமாவும், நதியாவும், நானும் தான் அரசியலுக்கு வரலாம். இது அனைத்துமே மக்களிடம் தான் உள்ளது. மக்கள் விரும்பினால் நானும் அரசியலுக்கு வர ரெடியாகத்தான் இருக்கிறேன்.” என்று தெரிவித்தார்.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...