நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில், அவரது அண்ணன் மகளும், பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் மனைவியும், தேசிய விருது பெற்ற நடிகையுமான சுஹாசினி அரசியலுக்கு வரப்போகிறார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட நடிகை சுஹாசினியிடம், திரைத்துறையில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வர ஆர்வம் காட்டுவதில்லையே ஏன்? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த சுஹாசினி, ”ஜெயலலிதா ஆட்சிக்கு கீழ் குடிமக்களாய் இவ்வளவு நாள் இருந்துவிட்டு திரைப்படத் துறையில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வருவதில்லையா? என கேட்பது மோசமான கேள்வி.
கம்ஹாசனும், ரஜினிகாந்தும் மட்டும் தான் அரசியலுக்கு வர வேண்டுமா? ஏன் ராதிகாவும், ரேவதியும், பூர்ணிமாவும், நதியாவும், நானும் தான் அரசியலுக்கு வரலாம். இது அனைத்துமே மக்களிடம் தான் உள்ளது. மக்கள் விரும்பினால் நானும் அரசியலுக்கு வர ரெடியாகத்தான் இருக்கிறேன்.” என்று தெரிவித்தார்.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...