கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நயந்தராவுக்கு தற்போதும் பட வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளது. இருந்தாலும் அனைத்து படங்களையும் ஒப்புக்கொள்ளாமல், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நயந்தாரா நடித்து வருகிறார்.
சிம்பு, பிரபு தேவா என்று இரண்டு முறை காதலி விழுந்த நயந்தாரா, தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் காதலில் விழுந்துள்ளார். இருவரும் ரொம்ப நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியான நிலையில், இந்த ஆண்டு இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துக்கொண்டனர். மேலும் கடந்த மாதம் தனது காதலரின் பிறந்தநாளை நியார்க்கில் கொண்டாடிய நயந்தாரா, அங்கு அவருக்கு அன்பு பரிசையும் கொடுத்தாராம்.
என்னதான் காதலரை மாற்றினாலும், முன்னாள் காதலரின் அடையாளமாக தனது கையில் குத்தப்பட்ட டாட்டூவை மட்டும் மாற்ற முடியாமல் திணறிய நயந்தாரா, ஒரு வழியாக அதையும் மாற்றிவிட்டார்.
ஆம், பிரபு தேவாவை காதலிக்கும் போது 'Pரபு' என தனது கையில் டாட்டூ குத்தியிருந்தா. பிரபு தேவா உடனான காதல் முறிந்த பிறகும் அந்த டாட்டூவ அவரால் மாற்ற முடியவில்லை. ஏன், விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்ட பிறகும் அந்த டாட்டூ அவரது கையில் அப்படியே தான் இருந்தது. இது குறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், தனது கையில் இருந்த 'Pரபு' என்ற டாட்டூவை Positivity என்று நயந்தாரா மாற்றிக்கொண்டிருக்கிறார். மேலும் தான் டாட்டூ மாற்றியதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு வருகிறார். நயனின் புதிய டாட்டூ புகைப்படும் படு வைரலாக பரவி கொண்டிருக்கிறது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...