அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தை சுமார் ரூ.132 கோடி பட்ஜெட்டில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது. இநிநிறுவனம் தயாரித்த படங்களிலேயே இப்படம் தான் மிகப்பெரிய பட்ஜெட் படமாகும். மேலும், இந்நிறுவனத்தின் 100 வது படம் இது.
இதற்கிடையே, ராஜேந்திரன் என்ற தயாரிப்பாளர் ஏற்கனவே ‘மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பில் படம் ஒன்றை தயாரித்து வருவதாகவும், தற்போது ‘மெர்சல்’ என்ற தலைப்பில் விஜய் நடித்தால், தன்னால் தொடர்ந்து, தனது படத்தை தயாரிக்க முடியாது, என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அக்டோபர் 3 ஆம் தேதி வரை ‘மெர்சல்’ என்ற தலைப்பை பயன்படுத்த கூடாது என்று ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து பதில் மனு தாக்கல் செய்த ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம், பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கபப்ட்டிருப்பதாலும், மெர்சல் என்ற தலைப்பில் ஏற்கனவே விளம்பரம் செய்யப்பட்டிருப்பதாலும், மெர்சல் என்ற தலைப்பை பயன்படுத்தவில்லை என்றால் பெரிய நஷ்ட்டம் ஏற்படும், எனவே மெர்சல் தலைப்பை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
இன்று மீண்டும் ‘மெர்சல்’ தலைப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரு தரப்பினரையும் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டதோடு, ‘மெர்சல்’ என்ற தலைப்பின் மீதான தடை தொடரும் என்றும் உத்தரவிட்டார்.
ஏற்கனவே, தீபாவளி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கங்களும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்று மெர்சல் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், தற்போது டைடில் பிரச்சினையும் முடிவுக்கு வராததால் விஜய் ரொம்பவே அப்செட்டாகியுள்ளாராம்.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...