குடி போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கு தொடர்பாக நடிகர் ஜெய் நீதிமன்றத்தில் நேரில் ஆஜாரானார்.
கடந்த 21 ஆம் தேதி நடிகர் ஜெய் மது அருந்திவிட்டு கார் ஓட்டினார், சென்னை அடையாறு மேம்பாலத்தில் கார் வந்த போது விபத்துக்குள்ளானது. இதில் ஜெய்க்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அருகில் இருந்து போலீசார் ஜெய்யை மீட்ட போது, அவரால் நிற்க கூட முடியாத அளவுக்கு செம போதையில் இருந்ததாக கூறப்பட்டது.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதோடு, வாகனத்தில் இன்சூரன்ஸ், ஆர்.சி புக் உள்ளிட்ட எதையும் ஜெய் வைத்திருக்கவில்லையாம். இது போதாது என்று ஏற்கனவே இது போல மது அருந்திவிட்டு இரண்டு முறை அபராதமும் கட்டியிருக்கிறாராம்.
இதனால் ஜெய் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு போட்டனர். இந்த வழக்கு விசாரணை நேற்று சைதாபேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது ஜெய் நீதிமன்றத்திற்கு நேரில் வந்தார்.
காரியிலேயே அமர்ந்திருந்த ஜெய், பத்திரிகைகாரர்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகே, காரை விட்டு இறங்கியதாக கூறப்படுகிறது. மேலும், அவர் நீதிமன்றத்திற்கு வரும் தகவல் ரகசியமாக வைக்கப்பட்டதாம்.
இந்த வழக்கு விசாரணை நாளையும் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதனால், நாளை ஜெய் மீண்டும் நீதிமன்றத்திற்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...