’ஈரம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அறிவழகன், தனது முதல் படத்திலேயே ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். அப்படத்தை தொடர்ந்து ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’, ‘குற்றம் 23’ ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற இணைய்த் தொடரையும் இயக்கினார்.
அருண் விஜயை வைத்து அறிவழகன் இயக்கியிருக்கும் ‘பார்டர்’ விரைவில் வெளியாக உள்ள நிலையில், அவர் தனது புதிய படத்தை அறிவித்துள்ளார். இந்த முறை இயக்குநராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் அறிவழகன் களம் இறங்குகிறார்.
ஆல்பா பிரேம்ஸ் என்ற நிறுவனம் மூலம் 7ஜி பிலிம்ஸ் சிவாவுடன் இணைந்து அறிவழகன் தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘சப்தம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஆதி நாயகனாக நடிக்கிறார்.
திரில்லர் படங்களை தனக்கே உரிய தனித்த திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய அறிவழகன், தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார்.
ஈரம் படம் மூலம் மாபெரும் வெற்றியை தந்த அறிவழகன், ஆதி வெற்றிக் கூட்டணி இப்புதிய படத்தில் இணைகிறது. ஈரம் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், ரசிகர்களை உறைய வைக்கும் திகில் திரில்லராக இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் தமன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் சமீபத்தில் நடைபெற்றது. பத்தில் பணியாற்ற உள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டூட்’(Dude)...
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் எஸ்...
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நாடகமான ‘சாருகேசி’ இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது...