Latest News :

டிராப்பான படம் - ஷாக்கான வடிவேலு!
Thursday October-05 2017

வைகை புயல் என்ற பட்டத்தோடு, காமெடியில் கலக்கி வந்த வடிவேலு, திடீரென்று அரசியலில் குதித்ததால் சினிமாவில் காணாமல் போனார். சுமார் 3 ஆண்டுகள் கழித்து மீண்டு நடிக்க வந்தவர், ஹீரோவாக தான் வருவேன், என்ற பிடிவாதத்தினால், இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து, தோல்வியை கண்டவர், பிறகு தான் புரிந்துக்கொண்டார் நமக்கு தெரிந்தது காமெடி தான் என்று.

 

இதை தொடர்ந்து மீண்டும காமெடி வேடங்களில் நடிகக் தொடங்கியுள்ள வடிவேலு பல படங்களில் நடித்து வருவதோடு, விஜயின் மெர்சல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் - வடிவேலு கூட்டணி மக்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் கூட்டணி என்பதால், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

இதற்கிடையே வடிவேலு ஹீரோவாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம பாகமான ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இதன் மூலமும் வடிவேலுவின் மவுசு மீண்டும் உயரத் தொடங்கியது.

 

இந்த நிலையில், ’இம்சை அரசன் 24ம் புலிகேசியின்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்ற தகவல், படத்தின் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்களிடமே சொல்லப்படாததால், அநேகமாக படம் டிராப்பாகலாம் என்றும் கூறப்படுகிறது.

 

இந்த தகவல் குறித்து தயாரிப்பு தரப்பு இதுவரை விளக்கம் தராதநிலையில், இந்த தகவலை அறிந்த வடிவேலு ரொம்பவே அதிர்ச்சியடைந்துள்ளாராம்.

Related News

878

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery