Latest News :

நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்!
Monday March-27 2023

2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதியன்று இரவு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தனது தோழிகளுடன் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் மகாபலிபுரம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் நெருங்கிய தோழி வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் காவல்துறையினர் நடிகை யாஷிகா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 

ஆனால், விபத்தில் பலத்த காயமடைந்த யாஷிகா ஆனந்த், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சில மாதங்களுக்குப் பிறகு குணமடைந்த யாஷிகா, மீண்டும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கியதோடு, தனது தோழி பவானி பற்றி சமூக வலைதளப் பக்கங்களில் உருக்கமாக பதிவிட்டு வந்தார்.

 

செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையானது நடைபெற்று வந்த நிலையில் மார்ச் 21 ஆம் தேதி, வழக்கு தொடர்பான விசாரணைக்கு யாஷிகா ஆஜராக வேண்டியதாக இருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.  

 

இதையடுத்து, வரும் மார்ச் 25 ஆம் தேதிக்கு நடிகை யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்படி ஒருவேளை அவர் ஆஜராகவில்லை என்றால் அவரை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

 

இந்த நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related News

8898

நடிகர் ரோபோ சங்கர் மறைவு! - திரையுலகம் அதிர்ச்சி
Thursday September-18 2025

பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

Recent Gallery