Latest News :

நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்!
Monday March-27 2023

2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதியன்று இரவு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தனது தோழிகளுடன் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் மகாபலிபுரம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் நெருங்கிய தோழி வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் காவல்துறையினர் நடிகை யாஷிகா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 

ஆனால், விபத்தில் பலத்த காயமடைந்த யாஷிகா ஆனந்த், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சில மாதங்களுக்குப் பிறகு குணமடைந்த யாஷிகா, மீண்டும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கியதோடு, தனது தோழி பவானி பற்றி சமூக வலைதளப் பக்கங்களில் உருக்கமாக பதிவிட்டு வந்தார்.

 

செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையானது நடைபெற்று வந்த நிலையில் மார்ச் 21 ஆம் தேதி, வழக்கு தொடர்பான விசாரணைக்கு யாஷிகா ஆஜராக வேண்டியதாக இருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.  

 

இதையடுத்து, வரும் மார்ச் 25 ஆம் தேதிக்கு நடிகை யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்படி ஒருவேளை அவர் ஆஜராகவில்லை என்றால் அவரை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

 

இந்த நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related News

8898

மோஷன் போஸ்டர் மூலம் வெளியான ‘தி இந்தியா ஹவுஸ்’ பட அறிவிப்பு
Monday May-29 2023

குளோபல் ஸ்டார்  நடிகர் ராம் சரண், 'வி மெகா பிக்சர்ஸ்' என்ற தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் திரையுலகில் தனது அடுத்த பயணத்தை வெற்றிகரமாக துவங்கியுள்ளார்...

சரத்குமார் - அசோக் செல்வன் நடிப்பில் உருவான ‘போர் தொழில்’ டீசர் வெளியானது
Monday May-29 2023

சரத்குமார், அசோக் செல்வன் முதன்மை பாத்திரங்களில் இணைந்து நடிக்க நிகிலா விமல்  முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள ’போர் தொழில்’ திரைப்படத்தை E4 எக்ஸ்பெரிமென்ட்ஸ் & எப்ரியஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது...

”எனக்கு ஆண்களை பிடிக்காது என்று நினைக்காதீங்க” - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
Monday May-29 2023

பிவிஆர் திரையரங்குகளில் தென்னிந்திய தலைமை அதிகாரியான மீனா சாப்ரியா, தனது வாழ்க்கை சுயசரிதத்தை ‘அன்ஸ்டாப்பபல்’ (UNSTOPPABLE) என்ற தலைப்பில் எழுதியுள்ளார்...