பாலா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்து வந்த ‘வணங்கான்’ திரைப்படம் சில காரணங்களால் பாதியில் கைவிடப்பட்ட நிலையில், அருண் விஜயை நாயகனாக வைத்து இயக்குநர் பாலா மீண்டும் ‘வணங்கான்’ படத்தை தொடங்கினார். இதில் கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகிறார்கள்.
கடந்த மாதம் கன்னியாகுமரியில் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், தற்போது முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இதில், படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் திருவண்ணாமலையில் தொடங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சில்வா சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...
ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் "உசுரே" திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது...