தொடர் நாயகன், வசூல் நாயகன், என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’ படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே வியாபரம் ஆனதால், அவரது மார்க்கெட் இன்னும் உயரந்துள்ளது. ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றவர்களின் படங்கள் மட்டுமே பூஜை போட்டதும் வியாபாரம் முடிந்துவிடும் நிலையில், அந்த வரிசையில் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார்.
இப்படி முன்னணி ஹீரோவாக இருந்தாலும், நட்பு அடிப்படையில் பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இப்படி தொடர்ந்து நடித்தால், ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடும், என்று அவரிடம் சிலர் கூறினாலும், என்ன செய்வது நட்புக்காக செய்ய வேண்டியுள்ளது, என்று கூறிவிட்டு தொடர்ந்து கெளரவ வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் படங்களின் இயக்குநர்கள், இனி எந்த படங்களிலும் கெளரவ வேடத்தில் நடிக்க வேண்டாம், என்று கேட்டுக்கொண்டதோடு, ஏன் அதை தவிர்க்க வேண்டும், என்பதையும் அவருக்கு பாடம் எடுக்க, அவர்களது பாடத்தை மூளையில் ஏற்றிக்கொண்ட விஜய் சேதுபதி, இனி கெளரவ வேடத்தில் நடிக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.
விஜய் சேதுபதியின் இந்த திடீர் முடிவால், அவரை கெளரவ வேடத்தில் சிறு காட்சியில் நடிக்க வைக்க வேண்டும், என்று நினைத்துக் கொண்டிருந்த பல முதல் பட இயக்குநர்கள் அப்செட்டாகியுள்ளார்கள்.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...