மது குடித்துவிட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் ஜெய் மீது சென்னை சைதாபேட்டை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதால், அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம், என்று எதிர்ப்பார்க்கப்பட்டுகிறது.
கடந்த மாதம் சென்னை அடையாறு மேம்பாலம் அருகே, மது போதையில் கார் ஓட்டி நடிகர் ஜெய் விபத்து உண்டாக்கினார். இதில் அவருக்கோ மற்றவர்களுக்கோ காயம் ஏதும் ஏற்படவில்லை, என்றாலும் அவர் நிற்க கூட முடியாத அளவுக்கு அதிக மது போதையில் இருந்துள்ளார்.
அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர் மீது குடி போதையில் அதிவேகமாக கார் ஓட்டியது, இன்சூரன்ஸ், ஆர்.சி. புக் போன்றவை இல்லாமல் காட்டியது உள்ளிட்ட பல கூற்றங்கங்களின் கிழ் வழக்குகள் பதிவு செய்ததோடு, கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஜெய், நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவர் நேற்று நீதிமன்றத்த்ல் ஆழராகவில்லை இதையடுத்து, நீதிபதி ஆப்ரகாம் ஜெய்க்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளர். இதனால் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...