அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ ரிலிசாவதற்கு முன்பாக பல சாதனைகளை செய்து வரும் நிலையில், அப்படத்தின் தலைப்புக்கு எதிராக தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
தான், ‘மெர்சலாயிட்டேன்’ என்ற படத்தை தயாரித்து வரும் நிலையில் விஜய் படத்திற்கு ‘மெர்சல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த தலைப்புக்கு தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வர்த்தக குறியீடு (டிரெட் மார்க்) பெற்றுள்ளது. இதனால், மெர்சலாயிட்டேன் படத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தயாரிப்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், அக்டோபர் 6ம் தேதி வரை மெர்சல் தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது. தற்போது ‘மெர்சல்’ படத்தின் பெயரை பயன்படுத்த தடையில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்துள்ளார். மேலும் ‘மெர்சல்’ தலைப்பை பயன்படுத்தவும், விளம்பரப்படுத்தவும் தடை இல்லை என்றும் கூறியுள்ளார். உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீதிமன்றத்தின் உத்தரவை கொண்டாடும் விதமாக விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...