வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் பல்வேறு மாநிலத்தவர்களின் வாழ்க்கை மேம்பட்டுக் கொண்டிருக்க, சில தமிழர்கள் பிற மாநிலங்களில் தங்களது வாழ்வுரிமைக்காக போராடும் சூழலும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில், உத்திரபிரதேசத்தில் தமிழர்கள் தங்களது வாழ்வுரிமைக்காக மேற்கொள்ளும் போராட்டத்தை மையமாக வைத்து ’உருமல்’ என்ற திரைப்படம் உருவாகிறது.
டபுள் எஞ்சின் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆர்.ராஜேஷ் தயாரிக்கும் இப்படத்தை கிரவுன் ராஜேஷ் இயக்குகிறார். இதில், நாயகர்களாக குருகாந்த், கார்த்திக் ஸ்ரீ, ராம் ராஜேஷ் ஆகியோர் நடிக்க, நாயகியாக ஷிவன்யாராணி நடிக்கிறார். ராஜா சாகிப், கவுன்கள் சுரேஷ், ஆனந்தா மூடர், ஸ்ரீதேவி அணில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் கதை எழுதி இயக்குவதோடு ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகிய பணிகளையும் கிரவுன் ராஜேஷ் கவனிக்கிறார். கிரவுன் ஜேஆர் இசையமைக்க, புரூஸ்லி ராஜேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். விஜயன் சேட்டையன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
சென்னை மற்றும் உத்திரபிரதேசத்தில் படமாக்கப்பட இருக்கும் ‘உருமல்’ படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு வரும் ஆகஸ் மாதம் உத்திரபிரதேசத்தில் தொடங்க உள்ள நிலையின், படத்தின் துவக்க விழா சமீபத்தில் கேரளாவில் பூஜையுடன் நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...