வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் பல்வேறு மாநிலத்தவர்களின் வாழ்க்கை மேம்பட்டுக் கொண்டிருக்க, சில தமிழர்கள் பிற மாநிலங்களில் தங்களது வாழ்வுரிமைக்காக போராடும் சூழலும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில், உத்திரபிரதேசத்தில் தமிழர்கள் தங்களது வாழ்வுரிமைக்காக மேற்கொள்ளும் போராட்டத்தை மையமாக வைத்து ’உருமல்’ என்ற திரைப்படம் உருவாகிறது.
டபுள் எஞ்சின் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆர்.ராஜேஷ் தயாரிக்கும் இப்படத்தை கிரவுன் ராஜேஷ் இயக்குகிறார். இதில், நாயகர்களாக குருகாந்த், கார்த்திக் ஸ்ரீ, ராம் ராஜேஷ் ஆகியோர் நடிக்க, நாயகியாக ஷிவன்யாராணி நடிக்கிறார். ராஜா சாகிப், கவுன்கள் சுரேஷ், ஆனந்தா மூடர், ஸ்ரீதேவி அணில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் கதை எழுதி இயக்குவதோடு ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகிய பணிகளையும் கிரவுன் ராஜேஷ் கவனிக்கிறார். கிரவுன் ஜேஆர் இசையமைக்க, புரூஸ்லி ராஜேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். விஜயன் சேட்டையன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
சென்னை மற்றும் உத்திரபிரதேசத்தில் படமாக்கப்பட இருக்கும் ‘உருமல்’ படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு வரும் ஆகஸ் மாதம் உத்திரபிரதேசத்தில் தொடங்க உள்ள நிலையின், படத்தின் துவக்க விழா சமீபத்தில் கேரளாவில் பூஜையுடன் நடைபெற்றது.
எஸ்.வி.எம் ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள படம் ‘த்ரிகண்டா’...
தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்...
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...