வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் பல்வேறு மாநிலத்தவர்களின் வாழ்க்கை மேம்பட்டுக் கொண்டிருக்க, சில தமிழர்கள் பிற மாநிலங்களில் தங்களது வாழ்வுரிமைக்காக போராடும் சூழலும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில், உத்திரபிரதேசத்தில் தமிழர்கள் தங்களது வாழ்வுரிமைக்காக மேற்கொள்ளும் போராட்டத்தை மையமாக வைத்து ’உருமல்’ என்ற திரைப்படம் உருவாகிறது.
டபுள் எஞ்சின் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆர்.ராஜேஷ் தயாரிக்கும் இப்படத்தை கிரவுன் ராஜேஷ் இயக்குகிறார். இதில், நாயகர்களாக குருகாந்த், கார்த்திக் ஸ்ரீ, ராம் ராஜேஷ் ஆகியோர் நடிக்க, நாயகியாக ஷிவன்யாராணி நடிக்கிறார். ராஜா சாகிப், கவுன்கள் சுரேஷ், ஆனந்தா மூடர், ஸ்ரீதேவி அணில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் கதை எழுதி இயக்குவதோடு ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகிய பணிகளையும் கிரவுன் ராஜேஷ் கவனிக்கிறார். கிரவுன் ஜேஆர் இசையமைக்க, புரூஸ்லி ராஜேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். விஜயன் சேட்டையன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
சென்னை மற்றும் உத்திரபிரதேசத்தில் படமாக்கப்பட இருக்கும் ‘உருமல்’ படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு வரும் ஆகஸ் மாதம் உத்திரபிரதேசத்தில் தொடங்க உள்ள நிலையின், படத்தின் துவக்க விழா சமீபத்தில் கேரளாவில் பூஜையுடன் நடைபெற்றது.
கடும் கோடை வெயிலில் இதம் தரும் தென்றலை போல காதல், நெகிழ்ச்சி மற்றும் மனதை வருடும் உணர்வுகளோடு ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...
தமிழகத்தில் சட்டப்பேரவை பொது தேர்தல் காரணமாக அனைத்து மாநில அரசியல் கட்சிகளும், தேசிய அரசியல் கட்சிகளும் வாக்காளர்களை சந்தித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள்...
‘வேர்ச்சொல் இலக்கிய விருது’ என்பது நீலம் பண்பாட்டு மையத்தின் முன்னெடுப்பில் கடந்த நான்கு வருடங்களாகக் கொடுக்கப்படும் விருதாகும்...