‘பத்து தல’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்புவின் அடுத்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சிம்புவின் 48 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார்.
‘எஸ்.டி.ஆர் 48’ என்று அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நடிகர் சிலம்பரசன் தற்போது லண்டனில் விடுமுறை நாட்களை கழித்து வருகிறார்.

அவர் லண்டனில் வலம் வரும் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவருடைய வித்தியாசமான கெட்டப் மற்றும் ஸ்டைலிஷான லுக்கை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...
ஏ.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் ஏ...
‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...