‘பத்து தல’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்புவின் அடுத்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சிம்புவின் 48 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார்.
‘எஸ்.டி.ஆர் 48’ என்று அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நடிகர் சிலம்பரசன் தற்போது லண்டனில் விடுமுறை நாட்களை கழித்து வருகிறார்.

அவர் லண்டனில் வலம் வரும் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவருடைய வித்தியாசமான கெட்டப் மற்றும் ஸ்டைலிஷான லுக்கை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...