‘பத்து தல’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்புவின் அடுத்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சிம்புவின் 48 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார்.
‘எஸ்.டி.ஆர் 48’ என்று அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நடிகர் சிலம்பரசன் தற்போது லண்டனில் விடுமுறை நாட்களை கழித்து வருகிறார்.
அவர் லண்டனில் வலம் வரும் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவருடைய வித்தியாசமான கெட்டப் மற்றும் ஸ்டைலிஷான லுக்கை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...