பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்துவிட்டாலும், அதில் பங்கேற்ற போட்டியாளர்கள் தினம் அளித்து வரும் பேட்டியால் அந்நிகழ்ச்சியின் தாக்கம் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. அதிலும், பிக் பாஸின் முக்கிய நபரான திகழும் ஓவியா பற்றி எந்த தகவலாக இருந்தாலும் அது வைரலாக பரவிவிடுகிறது.
அந்த வகையில், ஓவியா குறித்து தற்போது வெளியாகியிருக்கும் தகவல் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு புது சர்ச்சையையும் உண்டாக்கியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சக்தி, ஓவியாவை பார்த்து அடித்துவிடுவேன், என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், இது குறித்து சக்தி எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில், ஓவியாவிடம் தான் அப்படி நடந்துக்கொண்டது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ள சக்தி, “ஓவியாவுக்கு பைபோலார் நோய் இருப்பதாக அவரே என்னிடம் கூறியிருந்தார், அதனால் தான் அவரது மனநிலை நிலையாக இல்லாமல் மாறி கொண்டே இருந்தது. அவரை அவரது நிலைக்கு திரும்ப கொண்டுவரவே நான் அப்படி சொன்னேன்.
நானும் அதற்காக தான் அவரிடம் அன்றே மன்னிப்பு கேட்காமல் 100-வது நாளில் அனைவர் முன்னிலையில் அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.” என்று கூறியுள்ளார்.
சக்தியின் இந்த பேட்டியால், ஓவியா ரசிகர்கள் அதிருப்தி அடைந்திருப்பதோடு, சமூக வலைதளங்களில் சக்திக்கு எதிரான கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...