பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைத்து போட்டியாளர்களும் பெரிய அளவில் பிரபலமாகி வர, ஒருவர் மட்டும் எதிமறையாக பிரபலமாகியுள்ளார். அவர் தான் ஜுலி.
ஜல்லிக்கட்டு போராளி என்ற பட்டத்தோடு பிக் பாஸில் எண்ட்ரியான ஜுலி, ஓவியாவுடன் மோதலில் ஈடுபட்டார். இதன் காரணமாக அவரை கலாய்த்து ஓவியா ரசிகர்கள் மீம்ஸ்கள் வெளியிட்டதோடு, அவருக்கு எதிரான கருத்தையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு போட்டியாளர்கள் போகும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் பட்டாளம் சூழ்ந்துக்கொள்ள ஜூலிக்கும் மட்டும் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஜூலி நடனம் ஆடினார். பிறகு மைக் பிடித்து அவர் பேச முற்பட்ட போது, மாணவர்கள் “ஓவியா...ஓவியா....” என்று கத்தினர். இதனால் பேச முடியாமல் திணறிய ஜூலி, ஒரு கட்டத்தில் தான் பேச வந்ததை முழுமையாக பேசாமல், பாதியிலேயே புறப்பட்டார்.
ஜுலியின் இத்தகைய அவமானத்தை சமாளிக்கும் வகையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர், “ஜுலி நான் உங்க ரசிகன் தான்” என்று கூறி மழுப்பினார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...