அதிமுக-வின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய சசிகலா, தற்போது அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களால் உதாசினப்படுத்தப்பட்டு வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற அவர், இன்று 5 நாட்கள் விடுமுறை பரோலில் வெளியே வந்துள்ளார்.
அரசியல் பிரமுகர்களை சந்திக்க கூடாது, செய்தியாளர்களை சந்திக்க கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளுடன், உடல் நிலை சரியில்லாத தனது கணவரை சந்திப்பதற்காக 5 நாட்கள் பரோல் பெற்றுள்ள சசிகலாவை, பிரபல சினிமா பிரமுகர் ஒருவர் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலாவுக்கு சம்மந்தி முறையான இவர் பிரபல நடிகர் மட்டும் இன்றி, பழம்பெரும் நடிகரின் வாரிசும் ஆவார். சமீபத்தில் தனது தந்தைக்கு கட்டப்பட்ட மணிமண்டபத்தை வைத்து நிகழ்ந்த அரசியல் குறித்து மிகவும் வேதனை அடைந்துள்ளவர், தனது சம்மந்தியான சசிகலாவிடம் முறையிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊடகத்தினரை சந்திக்க கூடாது என்று சசிகலாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், உறவினர்களை சந்திக்க கூடாது என்று எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. உறவினர் என்ற முறையிலேயே அந்த பிரபல நடிகர் சசிகலாவை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அநேகமாக இன்று நள்ளிரவு அல்லது நாளை இரவு இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...