Latest News :

திகிலும் மர்மமும் நிறைந்த படமாக உருவாகியுள்ள ’நேற்று நான்.. இன்று நீ’!
Monday June-26 2023

கல்வித் துறையிலும் பத்திரிக்கை துறையிலும் சிறப்பாக பயணித்து வரும் 'தேசத்தின் குரல்' பத்திரிக்கை நிறுவனர். எச்.பாட்சா திரையுலகிலும் தன்  பயணத்தை துவக்கியிருக்கிறார். அவரது அப்பா டாக்கீஸ் நிறுவனம் மூலமாக ’நேற்று நான்.. இன்று நீ’ என்ற திரைப் படத்தினை தயாரித்திருக்கிறார். 

 

குறுகிய கால அளவில் குறைந்த முதலீட்டில் நல்ல கதையையும் நடிகர் நடிகையர்களையும் நம்பி தேர்ந்த தொழில் நுட்பக் கலைஞர்களின் பங்களிப் போடு தரமான திரைப் படங்களை தயாரிப்பதே எச்.பாட்சாவின் நோக்கம். அதன் முதல் படியே இத் திரைப்படம்.

 

திரைப்படக் கல்லூரியில் பயின்று சில படங்களையும் தொலைக் காட்சி தொடர்களையும் இயக்கியிருக்கும் பி.நித்தியானந்தம் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இ.ஆம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜெகன் கல்யாண் இசையமைக்க, ஜோன்ஸ் ஃபெனாண்டோ படத்தொகுப்பு செய்திருக்கிறார். முல்லை செல்வராஜ் வசனம் எழுதியிருக்கிறார்.

 

புதுமுகங்கள் ஆதித், வினிதா, தமிம், வினுபிரியா இவர்களுடன் ஆர். அரவிந்தராஜ், பிஜாய் மேனன், எச்.பாட்சா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் ‘நேற்று நான்..இன்று நீ’ சுவாரசியமான கதைக்களத்தோடு திகிலும், மர்மமும் நிறைந்த படமாக உருவாகியுள்ளது.

 

அயல்நாட்டிலிருந்து தாய் மண்ணுக்கு வந்து தன் பூர்வீக சொத்தை அடைய வந்த நாயகி எதிர் கொள்ளும் அமானுஷ்ய திகில் மர்மங்களையும் தெய்வ சக்தியையும் சொல்லும் மாறுபட்ட திரைப்படமாக உருவாகியுள்ள ‘நேற்று நான்..இன்று நீ’ அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.

Related News

9055

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday November-11 2025

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...

Recent Gallery