கல்வித் துறையிலும் பத்திரிக்கை துறையிலும் சிறப்பாக பயணித்து வரும் 'தேசத்தின் குரல்' பத்திரிக்கை நிறுவனர். எச்.பாட்சா திரையுலகிலும் தன் பயணத்தை துவக்கியிருக்கிறார். அவரது அப்பா டாக்கீஸ் நிறுவனம் மூலமாக ’நேற்று நான்.. இன்று நீ’ என்ற திரைப் படத்தினை தயாரித்திருக்கிறார்.
குறுகிய கால அளவில் குறைந்த முதலீட்டில் நல்ல கதையையும் நடிகர் நடிகையர்களையும் நம்பி தேர்ந்த தொழில் நுட்பக் கலைஞர்களின் பங்களிப் போடு தரமான திரைப் படங்களை தயாரிப்பதே எச்.பாட்சாவின் நோக்கம். அதன் முதல் படியே இத் திரைப்படம்.
திரைப்படக் கல்லூரியில் பயின்று சில படங்களையும் தொலைக் காட்சி தொடர்களையும் இயக்கியிருக்கும் பி.நித்தியானந்தம் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இ.ஆம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜெகன் கல்யாண் இசையமைக்க, ஜோன்ஸ் ஃபெனாண்டோ படத்தொகுப்பு செய்திருக்கிறார். முல்லை செல்வராஜ் வசனம் எழுதியிருக்கிறார்.
புதுமுகங்கள் ஆதித், வினிதா, தமிம், வினுபிரியா இவர்களுடன் ஆர். அரவிந்தராஜ், பிஜாய் மேனன், எச்.பாட்சா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் ‘நேற்று நான்..இன்று நீ’ சுவாரசியமான கதைக்களத்தோடு திகிலும், மர்மமும் நிறைந்த படமாக உருவாகியுள்ளது.
அயல்நாட்டிலிருந்து தாய் மண்ணுக்கு வந்து தன் பூர்வீக சொத்தை அடைய வந்த நாயகி எதிர் கொள்ளும் அமானுஷ்ய திகில் மர்மங்களையும் தெய்வ சக்தியையும் சொல்லும் மாறுபட்ட திரைப்படமாக உருவாகியுள்ள ‘நேற்று நான்..இன்று நீ’ அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...