மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையான நடிகர் ஜெய் சைதாபேட்டை நீதிமன்ற்த்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து ஜெய் மீது நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
மேலும் 2 நாட்களில் நடிகர் ஜெய்யை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து நடிகர் ஜெய் நேற்று சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். பிறகு அவரை நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தினர். அப்போது, ”திரைப்படத்தில் வருவது போலவே வாழ்க்கையையும் நினைத்துவிடாதீர்கள்” என்று நீதிபதி ஆபிரகாம் லிங்கன் ஜெய்க்கு அறிவுரை வழங்கினார்.
ஜெய் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதால், அவரது ஓட்டுநர் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி, ரூ.5200 அபராதம் விதித்தார்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...