Latest News :

வாழ்க்கை சினிமா அல்ல - ஜெய்க்கு நீதிபதி அறிவுரை!
Sunday October-08 2017

மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையான நடிகர் ஜெய் சைதாபேட்டை நீதிமன்ற்த்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து ஜெய் மீது நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

 

மேலும் 2 நாட்களில் நடிகர் ஜெய்யை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். 

 

இதையடுத்து நடிகர் ஜெய் நேற்று சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். பிறகு அவரை நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தினர். அப்போது, ”திரைப்படத்தில் வருவது போலவே வாழ்க்கையையும் நினைத்துவிடாதீர்கள்” என்று நீதிபதி ஆபிரகாம் லிங்கன் ஜெய்க்கு அறிவுரை வழங்கினார்.

 

ஜெய் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதால், அவரது ஓட்டுநர் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி, ரூ.5200 அபராதம் விதித்தார்.

Related News

907

மக்கள் என் கருத்துகளை ஏற்றுக்கொண்டனர் - இயக்குநர் பா.இரஞ்சித் பெருமிதம்
Sunday September-14 2025

லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...

கதை தேர்வு மூலம் வியக்க வைக்கும் அர்ஜூன் தாஸ்!
Saturday September-13 2025

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

Recent Gallery