Latest News :

தயாரிப்பாளரான நடிகை நீலிமா!
Sunday October-08 2017

‘தேவன் மகன்’ படத்தில் நாசரின் மகளாக குழந்தை வேடத்தில் நடித்து, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நீலிமா, தொடர்ந்து ‘நான் மகான் அல்ல’, ‘முரண்’, ‘திமிரு’,’ சந்தோஷ் சுப்ரமண்யம்’, ‘மொழி’ உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்ததோடு, ’வாணி ராணி’, ’தாமரை’,  ’தலையனை பூக்கள்’ உட்பட 80 க்கும் மேற்பட்ட தொலைகாட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

 

சினிமாவில் தனது 20 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் நீலிமா, தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். அவர் தொடங்கியுள்ள இசை பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம், ஜி தொலைக்காட்சிக்காக நெடுந்தொடர் ஒன்றை தயாரிக்கிறார்.

 

‘நிறம் மாறாத பூக்கள்’ என்ற இந்த நெடுந்தொடரில் முரளி, நிஷ்மா, அஸ்மிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இவர்களுடன், கெளதவி ரவி டேவிட் ராஜ், தாரிஷ், நேகா,அ ஸ்ரீநிஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

 

விசு இசையமைக்கும் இந்த தொடருக்கு அர்ஜுனன் கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, மகேஷ் எடிட்டிங் செய்கிறார். இனியன் தினேஷ் இயக்குகிறார். இசைவாணன், நீலிமா இசை ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

 

வரும் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2 மணிக்கு தொடர்ந்து ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள இந்த நெடுந்தொடர் மும்முனை காதல் கதையாகும்.

 

நாகர்கோவில் முட்டம், கன்னியாகுமர் போன்ற இடங்களில் படமாக்கப்பட்ட இந்த தொடர் குறித்து நீலிமா கூறுகையில், ”எனது 20 வருட கனவு இது. நானும் தயாரிப்பாளராக வேண்டும் என்கிற கனவு இன்று நிஜமாகி இருக்கிறது. சின்னத்திரையில் முதன்முறையாக தயாரிப்பாளராக கால் பதித்திருக்கிற நானும் என் கணவரும் பெரிய திரையிலும் தயாரிப்பாளராக கால் பதிக்க இருக்கிறோம்.” என்றார்கள்.

Related News

908

மக்கள் என் கருத்துகளை ஏற்றுக்கொண்டனர் - இயக்குநர் பா.இரஞ்சித் பெருமிதம்
Sunday September-14 2025

லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...

கதை தேர்வு மூலம் வியக்க வைக்கும் அர்ஜூன் தாஸ்!
Saturday September-13 2025

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

Recent Gallery