Latest News :

ஓவியாவின் உருக்கமான வேண்டுகோள்!
Sunday October-08 2017

"ஜப்பான்ல ஜாக்கி ஷான் கூப்பிட்டாக, அமெரிவுல டிரம்ப் கூப்பிட்டாக", என்ற ரீதியில் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றவர்கள், தனக்கு இத்தன வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அத்தனை படங்கள் புக் ஆகியிருக்கிறது, என்று கூறி வந்தாலும், தற்போது மீடியாக்களுக்கு பேட்டி கொடுப்பதில் மட்டுமே அத்தனை பேரும் பிஸியாக உள்ளார்களே தவிர, அவர்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை.

 

ஆனால், பிக் பாஸ் நாயகி ஓவியா, இதற்கு எதிர் மறை. மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்காத ஓவியா, வாய்ப்புகள் வருகையால் ரொம்பவே பிஸியாகியுள்ளார். ஒரு பக்கம் சில கோடி சம்பளத்துடன் விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர், மறு பக்கம் கேட்ட தொகையை சம்பளமாக கொடுக்கும் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமும் ஆகியிருக்கிறார்.

 

இதற்கிடையில், அவ்வபோது சமூக வலைதளங்கள் மூலமாக தனது ரசீகர்களையும் சந்தித்து வரும் ஓவியா, சமீபத்திய சந்திப்பின் போது தனது ரசிகர்களிடம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

 

அதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜூலியை, அக்கல்லூரியில் உள்ள ஓவியா ரசிகர்கள், பேச விடாமல் அவமானப்படுத்தி அனுப்பினார்கள். இது சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

 

இந்த விவகாரம் குறித்து தனது ரசிகர்களிடம் பேசியுள்ள ஓவியா, ”இனி ஜுலியை யாரும் தவறாக நடத்தாதீர்கள், அவர் பாவம்” என்று கூறியுள்ளார்.

 

ஓவியாவின் இத்தகைய நடவடிக்கையால், அவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவு பெருகிக்கொண்டே போகிறது.

Related News

912

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery