இந்திய சினிமாவையும் தாண்டி ஹாலிவுட் சினிமாவிலும் தனது வெற்றிக் கொடியை பறக்க விட்டிருக்கும் தனுஷ், தற்போது தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பல முன்னணி இயக்குநர்களுடன் கைகோர்த்து பணியாற்றி வருகிறார்.
கடந்த ஜூலை 28 ஆம் தேதி தனுஷ் பிறந்தநாள் கொண்டாடினார். அவரது பிறந்தநாளை பல ஆக்கப்பூர்வமான பணிகள் மூலம் கொண்டாடிய அவரது ரசிகரள் தமிழகத்தின் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.
அந்த வகையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள அருணாச்சலம் சாலையில் தனுஷ் ரசிகர் மன்றம் அமைத்த மோர் பந்தலில் கடந்த மூன்று மாதங்களாக அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக இலவச மதிய உணவு மக்களுக்கு வழங்கி வந்தனர்.
இந்நிலையில் ஜூலை 28 ஆம் தேதி தனுஷ் பிறந்தநாளில் பொதுமக்களுக்கு காலை உணவாக இட்லி, பொங்கல், கேசரி, பூரி ஆகியவை சுமார் 600 பேருக்கு வழங்கப்பட்டது. மேலும் மதிய உணவாக 1500 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை அனைத்திந்திய தலைமை மன்ற தலைவர் சுப்ரமணியம் சிவா உடன் இருந்து துவங்கி வைத்தார்.
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...
நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...