நடிப்பில் கவனம் செலுத்தி வரும் இயக்குநர் செல்வராகவன் பல படங்களில் கதையின் நாயகனாக மட்டும் இன்றி வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வரும் நிலையில், அறிமுக இயக்குநர் ரெங்கநாதன் என்பவர் இயக்கும் அரசியல் படத்தில் நயகனாக நடிக்கிறார்.
யோகி பாபு யோகி பாபு, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, ராதாரவி மற்றும் வினோதினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் நாயகியாக நடிக்க, மற்றொரு நாயகியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார்.
மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஜி ஏ ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்காதேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்கும் இப்படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ராமபாண்டியன் படத்தொகுப்பு செய்கிறார். டி.பாலசுப்பிரமணியன் கலை இயக்குநராக பணியாற்ற, சதீஷ் சுந்தர்ராஜன் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். மக்கள் தொடர்பாளராக நிகில் முருகன் பணியாற்றுகிறார்.

இப்படம் பற்றி இயக்குநர் ரெங்கநாதன் கூறுகையில், “தென் தமிழ்நாட்டின் அரசியலை பற்றி பேசும் கதை இது. பரபரப்பான களத்தில் ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்களை புகுத்தி உள்ளோம். கதையைக் கேட்ட செல்வராகவன் அவர்கள் அதை மிகவும் ரசித்ததோடு முதன்மை வேடத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார். அவருக்கும் இப்படத்தை தயாரிக்கும் ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் மிக்க நன்றி. படப்பிடிப்பு தொடங்கி திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐம்பது நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். பிரபல இசையமைப்பாளர் இத்திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். அவரது பெயர் விரைவில் வெளியிடப்படும்.” என்றார்.
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...
நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...