’சூது கவ்வும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான அசோக் செல்வன், ‘தெகிடி’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் தொடர் வெற்றிகளை கொடுத்து கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்தார்.
’ஓ மை கடவுளே’, ‘மன்மதலீலை’, ‘போர் தொழில்’ என்று அசோக் செல்வன் நடிக்கும் படங்கள் தொடர் வெற்றி பெற்று வருவதால் தற்போது அவர் கையில் ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது.
இந்த நிலையில், அசோக் செல்வனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. ஆம், பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை தான் அவர் மணக்க இருக்கிறார்.
’தும்ப’, ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருக்கும் கீர்த்தி பாண்டியனும், அசோக் செல்வனும் சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தார்களாம். தற்போத் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டியதால் திருமணம் செய்யவிருக்கிறார்கள்.
வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமணம் சென்னையில் நடக்க இருக்கிறது. விரைவில் இதற்கான அறிவிப்பை இருவரும் சேர்ந்து அறிவிக்க இருக்கிறார்கள்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...