ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் ‘2.0’ சுமார் 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது.
2018 ஆம் ஆண்டு வெளியாக உள்ள இப்பட்த்தின் புரோமோஷன்கள் இப்போதே தொடங்கப்பட்டுள்ள நிலையில், புதுப்படங்களை சட்டவிரோதமாக இணையத்திள் வெளியிட்டு, தமிழ் திரையுலகினருக்கு சவால் விட்டு வரும் தமிழ் ராக்கர்ஸுக்கு சவால் விடும் வகையில், ‘2.0’ படத்தினை வெளியிட லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
முதலில் 2.0 படத்தை 2டி மற்றும் 3டி ஆகிய வெர்ஷன்களில் திரையரங்குகளில் தன்மையைப் பொறுத்து வெளியிட திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது 3டி வெர்ஷன் மட்டுமே முதலில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதுதாம். இதன் பிறகு ஓரிரு வாரங்கள் கழித்த பின்பு படம் 2டி வெர்ஷனில் வெளியாகுமாம்.
இந்த 3டி வெர்ஷன் படத்தை திருட்டுத் தனமாக கேமராவில் பதிவு செய்து வெளியிடுவதை சரியான தரத்தை தராது. அப்படியே வெளியானாலும், அதனை ஆன்லைனிலோ அல்லது தொலைக்காட்சியிலோ படம் பார்க்கும் அனுபவம் என்பது 0 சதவீதமாகத் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பல தயாரிப்பாளர்களுக்கு சவால் விட்டு, படங்களை இணையத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸுக்கு, 2.0 படத்தின் மூலம் லைகா சவால் விட்டிருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...