மாடலிங் துறையில் இருந்து சினிமா துறைக்கு எண்ட்ரியான வித்யா பாலன், தனது கவர்ச்சி மூலம் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகியுள்ளார். இதற்கிடையே, அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கஹானி 2’ படம் தோல்வியடைந்தது. இதற்கு காரணம், அப்படத்தில் அவர் கவர்ச்சியாக நடிக்காமல் போனது தான் என்று கூறப்படுகிறது.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருவதால் கவர்ச்சியை சற்று குறைத்துக் கொண்ட வித்யா பாலன், ‘கஹாணி 2’ படத்தின் தோல்வியால் மீண்டும் கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்துள்ளார். அதுமட்டும் அல்ல, ஹீரோக்களுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது போல, ஹீரோயின்களுக்கும் முத்தம் மட்டுமல்ல மொத்தமாக கொடுப்பது போன்ற காட்சிகளிலும் நடிப்பாராம்.
அதாவது, படத்தின் கதைக்கு தேவைப்பட்டால், லெஸ்பியன் (பெண்ணோடு பெண் உறவு கொள்ளும் முறை) கதாபாத்திரத்தில் கூட நடிக்கவும் தயங்க மாட்டேன், என்று கூறியுள்ளார்.
ரசிகர்களுடனான கேள்வி பதில் நிகழ்வின் போது, இந்த விபரீத முடிவை வித்யா பாலன் அறிவித்ததால், பாலிவுட் முழுவதும் வித்யா பாலனின் பேச்சாகவே உள்ளதாம்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...